முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று வணங்கினால், ஏதாவது ஒன்றை பறிகொடுக்க நேரிடுவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவிவருகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பின் தமிழகமே தலைகீழாக மாறிவிட்டது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாற்றம் வந்தவண்ணம் உள்ளது. இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று வணங்கும் ஒவ்வொரு தலைவர்களும் ஏதாவது ஒன்றை பறிகொடுப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் உலா வந்துகொண்டுள்ளது.
இதற்கு உதாரணமாக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், திடீரென ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று தியானம் செய்த பின், எடப்பாடி பழனிசாமியிடம் முதல்வர் பதவியை பறிகொடுத்தார். பின் அவரது நெருங்கிய தோழி சசிகலா, அதிமுகவினரால் முதல்வராக தேர்வு செய்யப்பட்ட ஆவணத்தை, ஜெயலலிதா சமாதியில் வைத்து வணங்கினார். அதன்பின் நேராக, பெங்களூரு சிறைக்கு சென்றார்.
தொடர்ந்து தினகரன் சென்று ஜெயலலிதா சமாதியை வணங்கிய பின் அதிமுக., வின் அடையாளமான இரட்டை இலை சின்னத்தையும், கட்சியின் பெயரையும் பயன்படுத்தும் உரிமையை இழந்தார். இதேபோல தீபா சென்று வணங்கிய பின் தனது கணவர் மாதவனை பிரிந்தார்.
இப்படி, ஜெயலலிதாவின் சமாதியை வணங்கிய ஒவ்வொருவரும், எதாவது ஒன்றை இழந்த வண்ணம் உள்ளனர். இதற்கு தனக்கு துரோகம் செய்தவர்களை ஜெயலலிதா ஆத்மா படிப்படியாக பழி தீர்த்து வருவதாக, சமூக வலைதளங்களில், கருத்துக்கள் வேகமாக பரவி வருகிறது. இதனால் அ.தி.மு.க.,வினர் கலக்கத்தில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பின் தமிழகமே தலைகீழாக மாறிவிட்டது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாற்றம் வந்தவண்ணம் உள்ளது. இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று வணங்கும் ஒவ்வொரு தலைவர்களும் ஏதாவது ஒன்றை பறிகொடுப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் உலா வந்துகொண்டுள்ளது.
இதற்கு உதாரணமாக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், திடீரென ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று தியானம் செய்த பின், எடப்பாடி பழனிசாமியிடம் முதல்வர் பதவியை பறிகொடுத்தார். பின் அவரது நெருங்கிய தோழி சசிகலா, அதிமுகவினரால் முதல்வராக தேர்வு செய்யப்பட்ட ஆவணத்தை, ஜெயலலிதா சமாதியில் வைத்து வணங்கினார். அதன்பின் நேராக, பெங்களூரு சிறைக்கு சென்றார்.
தொடர்ந்து தினகரன் சென்று ஜெயலலிதா சமாதியை வணங்கிய பின் அதிமுக., வின் அடையாளமான இரட்டை இலை சின்னத்தையும், கட்சியின் பெயரையும் பயன்படுத்தும் உரிமையை இழந்தார். இதேபோல தீபா சென்று வணங்கிய பின் தனது கணவர் மாதவனை பிரிந்தார்.
இப்படி, ஜெயலலிதாவின் சமாதியை வணங்கிய ஒவ்வொருவரும், எதாவது ஒன்றை இழந்த வண்ணம் உள்ளனர். இதற்கு தனக்கு துரோகம் செய்தவர்களை ஜெயலலிதா ஆத்மா படிப்படியாக பழி தீர்த்து வருவதாக, சமூக வலைதளங்களில், கருத்துக்கள் வேகமாக பரவி வருகிறது. இதனால் அ.தி.மு.க.,வினர் கலக்கத்தில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.