ஆப்நகரம்

ஊரடங்கில் பெண்களுக்கு தவறிழைத்தால் கடும் நடவடிக்கை..!

ஊரடங்கு நாட்களில் குடும்ப வன்முறைகள் குறித்த புகாருக்கு உடனடி சட்ட நடவடிக்கை எடுக்க விருதுநகர் சட்ட பணிகள் ஆணையக் குழு மற்றும் முதன்மை நீதிபதி ஆகியோர் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

Samayam Tamil 17 Apr 2020, 4:18 pm
ஊரடங்கு உத்தரவு உள்ள நிலையில் குடும்ப வன்முறை, பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்களுக்கு சட்ட பணிகள் ஆணையக் குழுவை தொடர்பு கொள்ளலாம் என ஸ்ரீவில்லிப்புத்தூர் மாவட்ட முதன்மை நீதிபதி முத்துசாரதா அறிவித்துள்ளார்.
Samayam Tamil குடும்ப வன்முறைகள்


உலகையே கொரோனா வைரஸ் அச்சுறுத்தி ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியா உட்பட தமிழகத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து வெளியில் பொதுமக்கள் வர வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து தமிழக அரசு சார்பிலும் பொதுமக்கள் வெளியில் வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால் நீதிமன்றங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் குடும்ப வன்முறை, பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்கள், முதியோர்களுக்கு உதவி போன்ற அவரச வழக்கிற்கு சட்ட பணிகள் ஆணையக் குழுவை தொடர்பு கொள்ளலாம் என விருதுநகர் மாவட்ட சட்ட பணிகள் ஆணையக் குழு தலைவரும், ஸ்ரீவில்லிப்புத்தூர் மாவட்ட முதன்மை நீதிபதியுமான முத்துசாரதா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தொழிற்சாலைகள் இயங்குவதை குறித்து 20ம் தேதி அறிவிப்பு - சேலத்தில் முதல்வர் பேட்டி

வேலைக்கு சென்று வரும் பெண்களுக்கு சாதாரண நாட்களில் ஏற்படும் தொந்தரவுகளை போல வீட்டிலும் தற்போது குடும்ப வன்முறை சம்பவங்கள் நடப்பதாக டிஜிபி ரவி சமீபத்தில் தெரிவித்தார். அதன்படி நாளுக்கு சராசரி 25 வழக்குகள் வருவதாகவும் அவர் விளக்கினார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக ஏதேனும் வன்முறைகள் நடந்தால் கண்டிப்பாக எந்த தடையின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்ததோடு, இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டிலுள்ள பெண்களுக்கு அன்பும், அரவணைப்பும் கொடுத்து கோபத்தை வெளிப்படுத்தாமல் மகிழ்ச்சியாக இருங்கள் என அறிவுத்தியுள்ளார்.

அடுத்த செய்தி