ஆப்நகரம்

பூட்டிய வீட்டைத் திறந்தால் உறுமல் சத்தம், மிரட்டிய சிறுத்தை; எகிறி குதித்து ஓடிய குடும்பம்!

பாட்டவயல் பகுதியில் பின்வாசல் வழியாக வீட்டுக்குள் சிறுத்தை ஒன்று நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Samayam Tamil 5 Feb 2019, 5:33 pm
நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த பாட்டவயல் பகுதியில் வசித்து வருபவர் ராயன். இவர் தனது குடும்பத்தினர் உடன், உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளார். இதையடுத்து மீண்டும் தங்கள் வீட்டிற்கு திரும்பினர்.
Samayam Tamil Leopard


வீட்டின் கதவை திறந்தவுடன், உறுமல் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ராயன், வீடு முழுக்கத் தேடியுள்ளார். எதுவும் தென்படவில்லை. இதையடுத்து கட்டிலுக்கு அடியில் பார்த்துள்ளார்.

அங்கு உறுமல் சத்தத்துடன் சிறுத்தை ஒன்று அமர்ந்திருந்தது. இதைக் கண்ட உடன், அலறி அடித்துக் கொண்டு ராயன் குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியேறினர். உடனே வீட்டை பூட்டி விட்டு, வனத்துறைக்குத் தகவல் அளித்தனர்.

பகல் நேரத்தில் வீட்டின் பின்வாசல் வழியாக வீட்டிற்குள் சிறுத்தை நுழைந்தது தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை, சிறுத்தைக்கு மயக்க ஊசி போட்டு, அதைப் பிடிக்க முயற்சி செய்து வருகின்றனர்.

கால்நடை மருத்துவர் இல்லாத காரணத்தால் சிறுத்தையைப் பிடிப்பதில் தாமதம் ஏற்படுவதாக வனத்துறையினர் கூறியுள்ளனர்.

அடுத்த செய்தி