ஆப்நகரம்

தமிழ்நாட்டில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஆயிரத்துக்கும் குறைந்த கொரோனா பாதிப்பு..!

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு, இறப்பு மற்றும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 29 Dec 2020, 9:13 pm
தமிழகத்தில் இன்றைய (29-12-2020) கொரோனா நிலவரத்தை மாவட்ட வாரியாக பாப்போம்.
Samayam Tamil file pic


தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 957 பேருக்கு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் இரண்டு பேர் வெவ்வேறு மாநிலங்களில் இருந்து வந்தவர்கள். இன்றுடன் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,16,132 ஆக அதிகரித்துள்ளது. இது நீங்கலாக இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களில் மொத்தம் 19 பேருக்கும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 16 பேருக்கும் உருமாறிய வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் தற்போது 8,747 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 286 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 224958 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை 218250 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 3997 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோவையில் இன்று 81 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 52155ஆக அதிகரித்துள்ளது. 50673 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 648 பேர் பலியாகியுள்ளனர்.


பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று புதிதாக ஒருவருக்குகூட கொரோனா உறுதி செய்யப்படவில்லை. இதுவரை இங்கு 2255 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 2233 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது ஒருவர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். அதுபோல குறைந்தபட்சமாக அரியலூரில் இன்று ஒருவருக்குகூட கொரோனா உறுதி செய்யப்படவில்லை. இதுவரை இங்கு 4631 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் தற்போது 11 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

என் ரஜினி நலமாக இருக்க வேண்டும்: கமல்ஹாசன் உருக்கம்!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 64,413 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 1,37,49,877 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் இன்று 1,065 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால் இதுவரை குணமானோர்களின் எண்ணிக்கை 7,95,293 ஆக அதிகரித்துள்ளது. இன்று 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 12,092 ஆக உயர்ந்துள்ளது.

அடுத்த செய்தி