ஆப்நகரம்

'எங்கள் பணி எவ்வளவு சிரமம் என்பது தெரியட்டும்'.. டிக்டாக் சிறுவர்களுக்கு நூதன தண்டனை..

தூத்துக்குடியில் போலீஸ் வாகனத்தில் ஏறி நின்று டிக்டாக் வீடியோ வெளியிட்ட 3பேருக்கு காவல்துறையினர் நூதன தண்டனை வழங்கியுள்ளனர்.

Samayam Tamil 8 Jan 2020, 7:49 pm
தூத்துக்குடியில் பணிமனையில் நின்று கொண்டிருந்த காவல் துறை வாகனத்தின்முன்பாக டிக் டாக் வீடியோ பதிவிட்டதற்க்கு மாநகர காவல் துனை கண்காணிப்பாள் பிரகாஷ் இப்படியான தண்டனையை கொடுத்துள்ளார்.
Samayam Tamil டிக்டாக் சிறுவர்களுக்கு நூதன தண்டனை


கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்கள் சிலர் காவல்துறை வாகனத்தின் மீது ஏறிக்கொண்டு ரவுடி தோரணையில் விஜய் பாட்டுக்கு டிக்டாக் வீடியோ எடுத்தனர். டிக்டாக் வெளியிட்டதன் விளைவாக, அந்த இளைஞர்களை கண்டுபிடித்த காவல்துறை நூதனமான முறையில் தண்டனை வழங்கியுள்ளது.

அதாவது, போக்குவரத்துறை சீரமைக்கும் காவலர்களுடன் இணைந்து, நகரில் மிகவும் நெரிசலான உள்ள இடங்களில் போக்குவரத்து சீரமைக்கும் பணியை செய்யச்சொல்லி தண்டனை வழங்கியுள்ளார் டிஎஸ்பி.


ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்குமா? - தீர்ப்பு ஒத்திவைப்பு

இதுகுறித்து அவர் கூறுகையில் 'காவல் துறையின் பணி எவ்வளவு சிரமமானது என இவர்களுக்கு தெறியவேண்டும் என்பதற்க்காக இந்த மூன்று பேரையும் பெரிய மார்க்கட் சிக்னலில் எட்டுமணி நேரம் போக்குவரத்து சரி செய்யும் பணிசெய்து காவல்துறையை பெறுமை படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த தண்டனையை அவர்களுக்கு கொடுத்து, இனி இதுபோல குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என எச்சரித்து அனுப்பியுள்ளோம் என்று கூறினார்.

இந்த செய்தி இன்று இணையத்தில் பரவியதை அடுத்த போலீசாரின் அணுகுமுறையையும், வரம்பு மீறிய சிறுவர்களுக்கு அவர்கள் அளித்த உழைப்பு சார்ந்த தண்டனையையும் குறித்து நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

அடுத்த செய்தி