ஆப்நகரம்

விசாரணை கைதி என்கவுன்ட்டர்... எஸ்.ஐ.க்கு ஆயுள் தண்டனை

காவல் நிலைய சிறைக்குள் விசாரணை கைதி என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட வழக்கில், எஸ்.பி. பட்டணம் காவல் நிலைய எஸ்.ஐ.க்கு ஆயுள் தண்டனை விதித்து, ராமநாதபுரம் நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) தீர்ப்பளித்துள்ளது.

Samayam Tamil 14 Nov 2019, 6:50 pm
தேசிய, மாநில அளவில் மனித உரிமைகள் மீறல் தொடர்பான வழக்குகளில், காவல் துறை சம்பந்தமான வழக்குகள அதிக அளவில் பதிவாகி வருகின்றனர்.
Samayam Tamil fec


பொய் வழக்கு போடுவது, நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்வது, போலி என்கவுன்ட்டர், லாக்-கப்பில் நிகழும் மர்ம மரணங்கள் என, காவல் துறையில் நிகழும் மனித உரிமை மீறல் பட்டியலின் நீளம் அதிகம்.

போலீஸாரின் மனித உரிமை மீறல்களுக்கு ஒரு உதாரணமாக, கடந்த 2014 -ஆம் ஆண்டு, ராமநாதபுரம் மாவட்டம், எஸ்.பி.பட்டணம் காவல் நிலையத்தில் ஒரு சம்பவம் நடைபெற்றது.

ராமநாதபுரம் எஸ்.பி. அலுவலகத்தில் இனி வாரந்தோறும் குறைதீர்க்கும் கூட்டம்!

விசாரணை கைதியாக காவல் நிலைய சிறையில் அடைக்கப்பட்டிருந்த, சையது முகமது என்பவர் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்த வழக்கு, ராமநாதபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

கடந்த ஐந்தாண்டுகளாக நடைபெற்று வந்த இவ்வழக்கில், நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.அதில், " சையது முகமது போலீஸ் லாக்-கப்பில் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட வழக்கில், எஸ்.பி.பட்டணம் காவல் நிலைய எஸ்.ஐ. காளிதாஸுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது.

மேலும், அவருக்கு 2 லட்சம் ரூபாய் அபாரதமும் விதிக்கப்படுகிறது. இந்த அபராதத் தொகை சையது முகமதுவின் குடும்பத்துக்கு அளிக்க வேண்டும்" என நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி