ஆப்நகரம்

கோவை குண்டுவெடிப்பு: ஆயுள் தண்டனை கைதி உயிரிழப்பு

கோவை குண்டுவெடிப்பில் தொடர்புடைய ஆயுள் தண்டனை கைதி அப்துல் ஓசீர் என்பவர் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார்.

TNN 5 Oct 2016, 2:52 pm
கோவை: கோவை குண்டுவெடிப்பில் தொடர்புடைய ஆயுள் தண்டனை கைதி அப்துல் ஓசீர் என்பவர் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார்.
Samayam Tamil life term prisoner dead in coimbatore
கோவை குண்டுவெடிப்பு: ஆயுள் தண்டனை கைதி உயிரிழப்பு


கோவையில் கடந்த 1998-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் அப்துல் ஓசீர் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 2008-ஆம் ஆண்டில், இவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, அவரை சிறைக் காவலர்கள், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த3 மாத காலமாகவே நெச்சு வலி காரணமாக அப்துல் ஓசீர் அவதிப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

Life term prisoner dead in Coimbatore #CoimbatoreBombBlast

அடுத்த செய்தி