ஆப்நகரம்

‘சோடா பாட்டில்’ ஜீயருக்கு மீண்டும் கொலை மிரட்டல்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜத்திற்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 24 Feb 2018, 12:44 pm
விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜத்திற்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil life thread for srivilliputhur jeeyar
‘சோடா பாட்டில்’ ஜீயருக்கு மீண்டும் கொலை மிரட்டல்


திரைப்படப் பாடலாசிரியர் வைரமுத்து ஆண்டாளைப் பற்றி அவதூறாகப் பேசிய சர்ச்சையைக் கிளப்பிய போது, பல முறை உண்ணாவிரதம் அறிவித்து அதை வாபஸ் பெற்றவர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜம்.

இவர், “எங்களுக்கு கல்லெறியவும் தெரியும்; சோடா பாட்டில் வீசவும் தெரியும்” என்று பேசி பின்பு ‘ஆண்டாளிடம்’ அதற்காக மன்னிப்புக் கேட்டுவிட்டதாகச் சொல்லிக்கொண்டார். இவரது சோடா பாட்டில் பேச்சினால் அவர் ‘சோடா பாட்டில்’ ஜீயர் என்று பெயர் பெற்றார். இந்தப் பேச்சினால் அவருக்கு பல கொலை மிரட்டல்களும் விடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மீண்டும் ஒரு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது. திருச்சியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் பெயரில் இந்த மிரட்டல் வந்துள்ளது. “இந்த கொலை மிரட்டலை ஆண்டாளும், அரசும் பார்த்துக்கொள்வர்கள்” என்று கூறியுள்ளார் சோடா பாட்டில் புகழ் சடகோப ராமானுஜம்.

அடுத்த செய்தி