ஆப்நகரம்

அடடே, 7 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த இரு தினங்களுக்கு மழை பற்றிய முன் அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 17 Aug 2020, 12:43 pm
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக கோயம்புத்தூர், நீலகிரி, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil rain possibility in seven districts tamil nadu


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் . அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி பதிவாகும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவலா பகுதியில் 4 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. பந்தலூர், அவலாஞ்சி பகுதிகளில் தலா 1 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

கழகத்தினரை தூக்கும் பாஜக: அடுத்த குறி தேமுதிக?கழகத்தினரை தூக்கும் பாஜக: அடுத்த குறி தேமுதிக?

வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா, மேற்கு வங்க கடலோரப் பகுதியில் வரும் ஆகஸ்ட் 19 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

ஆகஸ்ட் 17,18 ஆகிய தேதிகளில் வடக்கு வங்கக்கடல் , ஒடிசா மற்றும் மேற்குவங்க கடலோரப் பகுதியில் பலத்த காற்று 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஆகஸ்ட் 17,18ஆம் தேதிகளில் தென் மேற்கு அரபிக்கடல் மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 50-60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஆகஸ்ட்19ஆம் தேதி வடக்கு வங்கக்கடல் , ஒடிசா மற்றும் மேற்குவங்க கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று 50-60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஆகஸ்ட 17 முதல் ஆகஸ்ட் 19 வரை கர்நாடகா முதல் குஜராத் கடலோர பகுதி வரை பலத்த காற்று 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மீண்டும் திறக்கப்பட்ட மேட்டூர் அணை: விவசாயிகள் உற்சாகம்!

ஆகஸ்ட19 முதல் ஆகஸ்ட்21 வரை தென் மேற்கு அரபிக்கடல் , மத்திய மற்றும் வடக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 50-60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தென் தமிழக கடலோரப் பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை இன்று (ஆகஸ் 17) இரவு 11.30 மணி வரை கடல் உயர் அலை 2.5 முதல் 3.1 மீட்டர் வரை எழும்பக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி