ஆப்நகரம்

இந்த மூன்று மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; வானிலை எச்சரிக்கை!

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் குறித்து இங்கே காணலாம்.

Samayam Tamil 3 Oct 2020, 1:39 pm
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பொதுவாக வறண்ட வானிலையே நிலவும். தலைநகர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும்.
Samayam Tamil Tamil Nadu Rains


கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைபெய்த விவரம் (சென்டிமீட்டரில்) :

ஏதுமில்லை.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 35 கிலோ மீட்டர் முதல் 45 கிலோமீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும். இந்தப் பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

டாஸ்மாக் பிரியர்களுக்கு வருத்தமான செய்தி - மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

கடல் உயர்அலை முன்னறிவிப்பு : ஏதுமில்லை.

மேலும் விவரங்களுக்கு imdchennai.gov.in இணையதளத்தை காணவும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா. புவியரசன் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி