ஆப்நகரம்

Chennai Rains: தமிழகத்தில் இங்கெல்லாம் கொட்டித் தீர்க்கப் போகும் மழை - அதுவும் இரண்டு நாட்களுக்கு...!

தமிழகத்தில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கும் இடங்கள் பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.

Samayam Tamil 23 Feb 2020, 8:54 am
தமிழகத்தில் கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கிய வடகிழக்குப் பருவமழை நல்ல மழையை வாரி வழங்கியது. தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய மழை அளவான 440 மில்லிமீட்டரில், 450 மில்லிமீட்டர் அளவிற்கு மழை கிடைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஜனவரி மாதத்தின் மத்தியில் பருவமழை நிறைவு பெற்றதை அடுத்து குளிர்ச்சியான சூழல் நிலவி வந்தது. இந்த சூழலில் தென் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் நேற்று தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
Samayam Tamil Rains


மேலும் குறிப்பிடுகையில், வரும் திங்கட்கிழமை காலை வரை கடலோர மற்றும் தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புண்டு. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இரவு நேரங்களில் வெப்பமான சூழல் நிலவும் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வலுவிழந்து விட்டது.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் - அடுத்து ஒரு ஹேப்பி நியூஸ் சொன்ன தமிழக அரசு!

ஆனால் கிழக்கு திசை காற்றின் தாக்கம் காரணமாக மழை பெய்யும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வறண்ட வானிலையே நிலவும்.

அவ்வப்போது வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். முன்னதாக கடலோர கர்நாடகம், அதை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி ஏற்பட்டது. இதையொட்டி தமிழகத்தில் சில இடங்களில் நேற்று மழை பெய்தது.

தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்தது. நாகர்கோவில், பார்வதிபுரம், புத்தேரி உள்ளிட்ட இடங்களிலும், திருநெல்வேலி மாவட்டம் பணகுடி, வள்ளியூர், நாங்குநேரி உள்ளிட்ட இடங்களிலும் மிதமான மழை பெய்தது. அதேசமயம் ராமேஸ்வரம், பாம்பன் ஆகிய கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்பட்டது.

அடுத்த செய்தி