ஆப்நகரம்

Chennai Rains: அடிச்சு வெளுக்கப் போகிறதா மழை? - தமிழகத்தின் லேட்டஸ்ட் வானிலை நிலவரம்!

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பிருக்கிறதா என்றும், எங்கெல்லாம் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்த தகவல்களை இங்கே காணலாம்.

Samayam Tamil 26 Aug 2020, 12:18 pm
தென்மேற்குப் பருவமழை காலம் நல்ல மழைப்பொழிவை அளித்து வருகிறது. தமிழகம் முழுவதும் பரவலாக அதிக மழை பெய்திருந்தாலும், சென்னையில் ஏமாற்றம் அளித்துள்ளது. சராசரியை விட குறைவான அளவே மழை பெய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் லேட்டஸ்ட் வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, தென் தமிழகத்தில் நிலவும் கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
Samayam Tamil Tamil Nadu Rains


இதில் கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், கரூர், திருச்சிராப்பள்ளி, சேலம், நீலகிரி, மதுரை, தேனி, திண்டுக்கல், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகள் அடங்கும். மற்ற மாவட்டங்களில் லேசான மழையும், ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.

Heavy Rain Alert: இத்தனை நாளா? அதுவும் இங்கெல்லாம் - புரட்டி எடுக்கப் போகும் மிகக் கனமழை!

தலைநகர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி பதிவாகும். கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை அதிகபட்ச மழை பெய்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை நிலவரம்:

* கயத்தாறு (தூத்துக்குடி) - 7 செ.மீ
* வானமாதேவி (கடலூர்) - 5 செ.மீ
* சோழவந்தான் (மதுரை), வாடிப்பட்டி (மதுரை), ஆண்டிபட்டி (மதுரை), திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு), பஞ்சப்பட்டி (கரூர்), தாத்தையங்கார்பேட்டை (திருச்சி) - 4 செ.மீ
* வந்தவாசி (திருவண்ணாமலை), கமுதி (ராமநாதபுரம்), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), குறிஞ்சிப்பாடி (கடலூர்) - 3 செ.மீ

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

இன்று(ஆகஸ்ட் 26) வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஆகஸ்ட் 26, 27 ஆகிய தேதிகளில் மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஷாக் கொடுத்த மேட்டூர் அணை; ஏமாற்றத்தில் டெல்டா விவசாயிகள்!

கடல் உயர்அலை முன்னறிவிப்பு:

தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை வரும் 27ஆம் தேதி இரவு 11.30 மணி வரை கடல் உயர் அலை 3.0 முதல் 3.3 மீட்டர் வரை எழும்பக்கூடும்.

மேலும் விவரங்களுக்கு imdchennai.gov.in இணையதளத்தை காண எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி