ஆப்நகரம்

கொரோனா குறையுது, டெங்கு கூடுது: தமிழக மக்களுக்கு அதிர்ச்சி செய்தி!

டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் சுகாதாரத்துறைச் செயலாளர் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார்.

Samayam Tamil 22 Oct 2020, 6:46 am
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் வேகம் சற்று குறைந்து வருவது மக்களிடையே நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. தொற்றால் பாதிக்கப்படுபவர்களைவிட குணமாகி வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனாவைப் போல் அடுத்த அச்சுறுத்தலாக டெங்கு காய்ச்சல் தமிழ்நாட்டில் பரவிவருகிறது.
Samayam Tamil dengue


தமிழக அரசின் சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை, எழும்பூர் மருத்துவமனை ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

சேலம் அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் எலிகள் நடமாடும் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அது குறித்து ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்தார். “தமிழ்நாட்டில் சேலம் அரசு மருத்துவமனை உள்பட சில அரசு மருத்துவமனைகளில் எலி தொல்லைகள் இருந்தன. அதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என அந்தந்த அரசு மருத்துவமனை நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, அரசு மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறது” என்றார்.

தமிழகத்தில் இரவு 10 மணி வரை கடைகளை திறந்து கொள்ளலாம்: அடுத்த தளர்வு அறிவிப்பு!

டெங்கு குறித்துப் பேசிய அவர், “தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு 8 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் இந்த ஆண்டு 1,800 பேர் மட்டுமே டெங்குவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அந்தவகையில் இந்த ஆண்டு மழைக்கால தொற்று நோய்கள் பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது” என்று கூறினார். இருப்பினும் வடகிழக்கு பருவமழை இனிமேல்தான் தொடங்கவுள்ள நிலையில் டெங்கு காய்ச்சல் மேலும் பரவ வாய்ப்புள்ளதோ என பொது மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

“கொரோனா தொற்று பரவலைத் தடுக்க முககவசம் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று அவ்வப்போது அறிவுறுத்தி வருகிறோம். இதனை கடைப்பிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்காத வணிக வளாகம் ஒன்றுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 15 நிமிடங்கள் பொது மக்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்தால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்படும்” என்று தெரிவித்தார்.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: அடேயப்பா ஆறு மாவட்டங்களுக்கு கனமழை!

மேலும் அவர், “கொரோனா தொற்றை கண்டறிய ஆர்.டி.பி.சி.ஆர். மட்டுமே சிறந்த பரிசோதனை முறை. சி.டி ஸ்கேன் மூலம் கொரோனா நோய் தொற்றை கண்டறிய முடியாது” என்று கூறினார்.

அடுத்த செய்தி