ஆப்நகரம்

ராகுல் காந்தி பதவி பறிபோனது எப்படி? ஜெயலலிதாவுக்கு நடந்தது இது தான்!

ராகுல் காந்தியை போல் 2014ஆம் ஆண்டு ஜெயலலிதா சட்டமன்ற உறுப்பினர், முதல்வர் பதவிகளை இழந்தார்.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 24 Mar 2023, 4:15 pm
ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ள நிலையில் நாடு முழுவதும் அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பு கிளம்பியுள்ளது.
Samayam Tamil rahul gandhi and jayalaithaa


2019 மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின்போது கர்நாடகாவில் பேசிய ராகுல் காந்தி, “எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற துணை பெயர் ஏன் இருக்கிறது?” என்று பேசினார்.

இது ஒட்டுமொத்தமாக மோடி என்ற துணைப் பெயர் கொண்டவர்கள் அனைவரையும் அவமானப்படுத்துவதாக இருக்கிறது என்று கூறி, புருனேஷ் மோடி என்பவர் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணை நடந்து சூரத் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் ராகுல் காந்தியை குற்றவாளி என நேற்று தீர்ப்பு வழங்கினார்.

அதே சமயம் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கி அவர் மேல்முறையீடு செய்ய வாய்ப்பாக 30 நாட்களுக்கு தண்டனையை நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.
மம்தா பான்ர்ஜி - நவீன் பட் நாயக் சந்திப்பு: மூன்றாவது அணி வேலைகள் தொடங்கிவிட்டதா?
தகுதி நீக்கம் - அறிந்து கொள்ள வேண்டியவை!

தண்டனை விதிக்கப்பட்டதால் மக்களவை செயலகம் ராகுல் காந்தியின் எம்பி பதவியை தகுதி நீக்கம் செய்தது. இந்த சூழலில் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக அறிந்து கொள்வது அவசியம். இவ்வாறு தகுதி நீக்கம் செய்ய முடியுமா என்றால் முடியும் என்பதே உடனடி பதிலாக இருக்க முடியும். தமிழ்நாட்டில் இதற்கு முன்னர் ஜெயலலிதா இதே போல் தனது பதவியை இழந்துள்ளார்.

சட்டம் என்ன சொல்கிறது?

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-இன் கீழ் குற்ற வழக்குகளில் குறைந்தபட்சம் இரு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றால் அவர் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் தகுதியை இழக்கிறார். அரசியலை குற்றமயமாக்குவதைத் தடுப்பது மற்றும் குற்றத்துக்காக தண்டிக்கப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டு இது அமைக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா பதவியை இழந்தது இப்படி தான்!

தமிழ்நாட்டில் ஜெயலலிதா இதே போல் தனது முதல்வர் பதவியை இழந்தார். 2014ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக ஜெயலலிதா பதவி வகித்த போது சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனி நீதிமன்ற நீதிபதி குன்ஹா ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பு வழங்கினார். இதனால் அவரது சட்டமன்ற உறுப்பினர் பதவி, முதல்வர் பதவியை இழந்தார்.

அதன் பின்னர் மேல் முறையீடு செய்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இதனால் தேர்தலில் போட்டியிட அவருக்கு இருந்த தடை விலகியது. அதைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார்.
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
ராகுல் காந்தி குற்றமற்றவர் என நிரூபிப்பாரா?

அதே போல் ராகுல் காந்தியை எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்துள்ளனர். ராகுல் காந்தி குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து குற்றமற்றவர் என்று தீர்ப்பு அவருக்கு சாதகமாக வந்தாலும் அவருக்கு எம்.பி.பதவி கிடைக்காது. தேர்தலில் போட்டியிடுவதற்கான தடை மட்டுமே விலக்கி கொள்ளப்படும். அதைத் தொடர்ந்து அவர் தேர்தலில் நின்று வெற்றி பெற்று தான் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராக முடியும்.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி