ஆப்நகரம்

தமிழ்நாட்டிலேயும் தர்ணா போராட்டம் நடந்திருக்க வேண்டும்: கமல் ஹாசன்!

மம்தா பானர்ஜியின் தர்ணா போராட்டத்தை போன்று தமிழகத்திலும் நடந்திருக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் விமர்ச்சித்துள்ளார்.

Samayam Tamil 4 Feb 2019, 11:03 pm
மம்தா பானர்ஜியின் தர்ணா போராட்டத்தை போன்று தமிழகத்திலும் நடந்திருக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் விமர்ச்சித்துள்ளார்.
Samayam Tamil haasan


மம்தா பானர்ஜியின் தர்ணா போராட்டத்தை போன்று தமிழகத்திலும் நடந்திருக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் விமர்ச்சித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமல் ஹாசன் கூறுகையில், பொள்ளாச்சியில் கட்சி நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள வந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், மம்தா பானர்ஜி தொடர்ந்து வரும் தர்ணா போராட்டம் போன்று தமிழகத்திலும் நடந்திருக்க வேண்டும், ஆனால் நடக்கவில்லை எனவும், அவ்வளவு அழுத்தம் மேலிருந்து வருவதை சுயமரியாதையுள்ள எந்த அரசும் இது போன்ற அழுத்தத்தை ஏற்றுக்கொள்ளாது என விமர்சித்தார்.

பழைய வாக்குச்சீட்டு முறை தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், நவீனத்தை ஏளனப்படுத்தக்கூடாது எனவும், ஓட்டையுள்ள பக்கெட்டில் தண்ணீர் எடுக்க கூடாது, ஆனால் ஓட்டை இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும் என கூறினார்.

காட்டு யானை சின்னதம்பியை கும்கியாக மாற்றும் முயற்சி குறித்த கேள்விக்கு, வாழ்வாதாரம் பாதிப்பது எனபது ஒருவிதம் என்றும் மிருகங்களின் இடத்தை நாம் ஆக்கிரமிப்பது பேராசையின் உச்சகட்டம் எனவும் அதற்கான விளைவுகளை நாம் ஏற்று கொள்ளத்தான் வேண்டும் எனவும் சுட்டிக் காட்டினார்.

சின்னதம்பி யானையை கும்கியாக மாற்றுவது தொடர்பாக வனத்துறை அமைச்சர் மற்றும் நீதிமன்றத்தில் அரசு பதில் ஆகியவற்றில் உள்ள முரண்பாடு குறித்த கேள்விக்கும் பதில் கூறியவர், அது அவர்களின் தனி குணாதிசியம் என்றும் இதில் வியப்பு இல்லை, இரு நாக்குடையவர்கள் என தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி என்பது இப்போது சொல்ல முடியாது, ஆனால் போட்டியிடுவோம் என தெரிவித்த கமலஹாசன், நிர்வாகிகள் கூட்டணி குறித்து பல கருத்துக்கள் சொல்லியுள்ளனர் எனவும் கூறினார். பாஜக பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டுத்தான் தமிழகம் வருகிறார்கள் என்றும் தமிழகத்தில் கூட்டணிக்காக பிரதான கட்சிகள் உட்பட பல கட்சிகள் கேட்டிருப்பதாகவும், அதை இங்கு விவாதிக்க கூடாது எனவும் விளக்கம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி