ஆப்நகரம்

ஒரு கட்டிங் போட்டு தான் போவேன்: "குடி"மகன்கள் வைராக்கியம்

படிப்படியான மதுவிலக்கு தமிழகத்தில் இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், தமிழக மக்கள் பல்வேறு மனநிலையில் உள்ளனர்.

TNN 24 May 2016, 11:17 am
சென்னை: படிப்படியான மதுவிலக்கு தமிழகத்தில் இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், தமிழக மக்கள் பல்வேறு மனநிலையில் உள்ளனர்.
Samayam Tamil liquor ban mentality of tn people
ஒரு கட்டிங் போட்டு தான் போவேன்: "குடி"மகன்கள் வைராக்கியம்


நடைபெற்று முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக அரசு பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடித்தது. பதவியேற்றதும் அவர் போட்ட முதல் ஐந்து கையெழுத்தில் படிப்படியான மதுவிலக்கும் அடங்கும். முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்ட மதுவிலக்கு குறித்த கோப்பில், முதல்கட்டமாக 500 சில்லறை மதுபான விற்பனை கடைகள் மூடப்படும் என்றும், மது விற்பனை கடைகள் காலை 10 மணிக்கு பதில், இரண்டு மணி நேர தாமதமாக 12 மணிக்கு திறக்கப்படும் என்றும் உள்ளது.

முதல்வரின் இந்த முடிவுக்கு பொதுமக்கள் மத்தியில் பெரும்பான்மையாக வரவேற்பு உள்ளது. இரண்டு மணி நேரம் தாமதமாக கடையை திறந்தால், வேலைக்கு செல்லுவோர் காலையிலேயே மது அருந்துவது தடுக்கப்படும். அவர்கள் ஒழுங்காக வேலைக்கு போவார்கள் என்பன உள்ளிட்ட சில நல்ல அம்சங்கள் உள்ளன.

அதேநேரம், மதுப்பிரியர்களின் மனநிலை வேறு விதமாக உள்ளது. "காலை 10 மணிக்கு வந்து ஒரு கட்டிங் போட்டுவிட்டு வேலைக்கு சென்று சம்பாதித்து வருவோம். உடல் அலுப்பு தீருவதற்காக குடிக்கிறோம். இப்போ கடையை மூடி விட்டார்கள். கடை திறக்கும் வரை காத்திருந்து ஒரு கட்டிங் போட்டு தான் வேலைக்கு போவோம் என்ற வைராக்கியத்தில் உள்ளனர். எனவே, காலையில் 2 மணி நேரம் அவர்கள் வேலை பார்ப்பது தடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, 500 கடைகள் மூடப்பட்டதால் பெரிய மாற்றமும் நடைபெறவில்லை. சிறிது தூரம் நடந்து சென்று குடித்து விட்டு தான் செல்கிறார்கள் மதுப்பிரியர்கள். மேலும், கள்ளச்சாரம் காய்ச்சுவது பெருகும் என்றும் மதுப்பிரியர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இதில் முதல்வர் ஜெயலலிதா கையாண்ட தெளிவான விஷயம் என்னவென்றால். மதுக் கடைகளை காலையில் மூடியது தான். அப்படி என்ன தெளிவான விஷயம் என்று பார்த்தால், டாஸ்மாக் கடைகளில் காலையில் சென்று குடிப்பவர்கள் வெறும் 10 சதவீதம் பேர் தானாம். வருமானமும் கிட்டத்தட்ட ரூ.10,000 வரை தான் நடக்குமாம்.

ஆனால், மாலையில் குடிப்பவர்கள் ஏராளம். டாஸ்மாக் கடைகள் நிரம்புவது மாலையில் தான் என்பது நிதர்சனம். வசூலும் அந்த நேரங்களில் தான் சக்கைபோடு போடும். எனவே, ஜெயலலிதாவின் இத்தகைய காய் நகர்த்தலால், வருமானம் பாதிக்காத வகையில், தேர்தல் வாக்குறுதிகளில் உள்ளபடி "படிப்படியான மதுவிலக்கில்" ஒரு படி நடந்தேறியும் விட்டது.

அடுத்த செய்தி