ஆப்நகரம்

பால் பாக்கெட் டப்பாக்களில் சரக்கு பாட்டில்கள் கடத்தல்!

பால் பாக்கெட்டுகள் அடிக்கி வைகும் டப்பாவில் சரக்ம்கு பாட்டில் வத்து கத்திய சம்வபம் கடும் பரப்ரப்பை ஏற்படுத்தி உள்ளது.

TNN 17 Oct 2017, 12:40 pm
பால் பாக்கெட்டுகள் அடிக்கி வைகும் டப்பாவில் சரக்ம்கு பாட்டில் வத்து கத்திய சம்வபம் கடும் பரப்ரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Samayam Tamil liquor bottle illegally carried under milk packets
பால் பாக்கெட் டப்பாக்களில் சரக்கு பாட்டில்கள் கடத்தல்!

கீழக்கரை செல்லும் சாலையில் பால் பாக்கெட்டுகள் அடுக்கி வைக்கப்பட்ட அடுக்கிவைக்கப்படும் பிளாஸ்டிக் டப்பாக்களில் மறைத்து எடுத்துச்சென்ற 150 மது பாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். அவற்றை மினி சரக்கு வேனில் எடுத்துவந்த இருவர் தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டனர்.

ராமநாதபுரத்திலிருந்து கீழக்கரை செல்லும் சாலையில், மதுவிலக்குப் பிரிவு ஏ.டி.எஸ்.பி. வெள்ளத்துரைக்கு கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், காலவல்துறையினர் அப்பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த மினி சரக்கு வேனை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் பால் பாக்கெட்டுகள் பிளாஸ்டிக் டப்பாக்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. பால் பாக்கெட்டுகளை அகற்றிவிட்டுப் பார்த்தபோது, அதில் நான்கு வகையான 150 மது பாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

ஒரு பாட்டிலின் விலை ரூபாய் 80 . அவற்றை காவல்துறையினர் பார்வையிட்டுக்கொண்டிருந்தபோது, வாகனத்தை ஓட்டி வந்தவரும், மற்றொரு நபரும் தப்பி ஓடி தலைமறைவாகினர். பின்னர், 150 மதுபாட்டில்களையும், அவற்றைக் கடத்துவதற்குப் பயன்படுத்திய மினி சரக்கு வேனையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் தப்பி ஓடிய இருவரும், ராமநாதபுரம் எம்.எஸ்.கே.நகரைச் சேர்ந்த விஜயகுமார் மற்றும் ராஜேஷ் என்பது தெரிய வந்துள்ளது. இருவர் மீதும் ராமநாதபுரம் மதுவிலக்குப் பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Liquor bottle illegally carried under milk packets

அடுத்த செய்தி