ஆப்நகரம்

டாஸ்மாக்கில் மது விற்பனை படுஜோர்; முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்தில் நேற்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதை அடுத்து விற்பனை களைகட்டத் தொடங்கியது.

Samayam Tamil 17 May 2020, 11:00 am
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் பலகட்டங்களாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பல்வேறு கடைகள் மற்றும் வர்த்தக செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டது. முதல் இரண்டு ஊரடங்கில் கட்டுப்பாடுகள் தீவிரமாக இருந்த நிலையில் மூன்றாம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டன. அதன்படி தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. ஆனால் பல்வேறு இடங்களில் ஊரடங்கு விதிமுறைகள் மீறப்பட்டன. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டது.
Samayam Tamil டாஸ்மாக் விற்பனை


அதேசமயம் ஆன்லைன் வாயிலாக வீட்டிற்கே சென்று மதுபானங்கள் விற்க திட்டமிடப்பட்டது. இதற்கிடையில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு விசாரணையில் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

தமிழகத்தில் கோவிட்-19 நிலவரம் எப்படியிருக்கிறது? - லேட்டஸ்ட் களநிலவரம் இதோ!

அதன்படி தமிழகத்தில் நேற்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. அதேசமயம் ஆதார் அட்டை அவசியமில்லை என்று உத்தரவிடப்பட்டது. மேலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வண்ணத்தில் டோக்கன்கள் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி நேற்று நீல நிறத்தில் டோக்கன் வழங்கப்பட்டன. சரீர விலகலை கடைபிடிக்கும் வகையில் ஒரு மணி நேரத்திற்கு 70 டோக்கன்களும், ஒரு நாளைக்கு 500 டோக்கன்களும் வழங்கப்பட்டு அதற்கேற்ப மட்டும் மதுபானங்கள் விற்கப்பட்டன.

இந்நிலையில் முதல் நாளான நேற்று ரூ.163 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிகபட்சமாக,

1 - மதுரை மண்டலத்தில் ரூ.44.7 கோடி

2 - சேலம் மண்டலத்தில் ரூ.41.07 கோடி

3 - திருச்சி மண்டலத்தில் ரூ.40.5 கோடி

4 - கோவை மண்டலத்தில் ரூ.33.05 கோடிக்கும்

புதுக்கோட்டை: முகக்கவசம் அணிந்து சந்தைக்கு வந்த பொதுமக்களுக்கு இலவச காய்கள்..!

மது விற்பனை நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் நாள் விற்பனையின் போது மது பிரியர்கள் செல்பி எடுத்து உற்சாகமாக வாங்கிச் சென்றனர். கொரோனா வைரஸ் அதிகம் இருப்பதால் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி