ஆப்நகரம்

புதுச்சேரி ‘குடி’மகன்களுக்கு ஹேப்பி நியூஸ்: நாளை முதல் மதுக்கடைகள் திறப்பு!

புதுச்சேரியில் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, மதுக்கடைகள் நாளை முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மதுப்பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Samayam Tamil 18 May 2020, 2:37 pm
புதுச்சேரி: மதுப்பிரியர்களின் சொர்க்க பூமியான புதுச்சேரியில் மதுக்கடைகள் நாளை முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வர பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கம் வருகிற 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், கொரோனா பாதிப்பை அடிப்படையாக கொண்டு சில தளர்வுகளையும் மத்திய அரசு அறிவித்துள்ளது. மூன்றாவது முறையாக பொது முடக்கம் நீட்டிக்கப்பட்ட போதே மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த தளர்வுகளின் அடிப்படையில் பல்வேறு மாநிலங்களில் மூடப்பட்ட மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன.

தமிழகத்தை பொறுத்தவரை கட்டுப்ப்படுத்தப்பட்ட பகுதிகள், சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் தவிர்த்து மற்ற இடங்களில் அரசின் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. ஆனால், சரீர விலகல் உள்ளிட்ட நீதிமன்ற உத்தரவுகள் சரியாக கடைபிடிக்கப்பட வில்லை என கோரி தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டது.

TASMAC Revenue: தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் இத்தனை கோடிக்கு டாஸ்மாக் மது விற்பனை!!

எனினும், கடுமையான சட்டப்போராட்டம் நடத்தி உச்ச நீதிமன்றத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை வாங்கிய தமிழக அரசு, மீண்டும் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறந்துள்ளது.

ஆனால், மதுப்பிரியர்களின் சொர்க்க பூமியாக திகழும் அண்டை மாநிலமான புதுச்சேரியில் இதுவரை மதுக்கடைகள் திறக்கப்படவில்லை. புதுச்சேரிக்கு முக்கிய வருவாய் காரணியே சுற்றுலாவும், மதுவும்தான். ஆனால், அங்கு மதுக்கடைகள் திறக்கப்படாத நிலையில், தமிழகத்தில் மட்டும் திறக்கப்பட்டது விமர்சனத்துக்கு உள்ளானது. அதேசமயம், மதுக்கடைகளை திறப்பது தொடர்பாக அமைச்சரவை கூடி விரைவில் முடிவெடுக்கும் என புதுச்சேரி முதல்வர் நாரயணசாமி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், புதுச்சேரியில் மதுக்கடைகள் நாளை முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நாளை மதுக்கடைகளை திறக்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மதுக்கடைகள் திறந்திருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி