ஆப்நகரம்

இதுவரை தமிழகத்தை புரட்டி எடுத்த புயல்கள் லிஸ்டு பாஸ்

கஜா புயல் இன்று இரவு நாகை அருகே கரையை கடக்கும் நிலையில், தமிழகத்தை இதற்கு முன்பாக தாக்கிய புயல் பற்றிய சிறு தொகுப்பு

Samayam Tamil 15 Nov 2018, 6:55 pm
கஜா புயல் இன்று இரவு நாகை அருகே கரையை கடக்கும் நிலையில், தமிழகத்தை இதற்கு முன்பாக தாக்கிய புயல் பற்றிய சிறு தொகுப்பு
Samayam Tamil cyclone-gaja4


வங்கக் கடலில் உருவான 29 புயல்களில் தானே, நிஷா, வர்தா புயல்கள்தான் அதிக பாதிப்பைஏற்படுத்தியவை.1996 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3 ஆம் தேதி வங்கக்கடலில் தோன்றிய புயல் 100 கிலோமீட்டர் வேகத்தில் சென்னை அருகே கரையை கடந்தது. இதில் கூவம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

1977 ஆம் ஆண்டில் தமிழகத்தை தாக்கிய புயலால் திருச்சி மற்றும் தஞ்சையில் அதிக சேதங்கள்ஏற்பட்டது. பின்னர் 1990 முதல் 2006ம் ஆண்டு வரை உருவான புயல்களில் 1998ல் உருவான புயல் அதிக அளவில் மழையை கொட்டித் தீர்த்தது. இந்த ஆண்டில் 30 சதவிகித அதிகமழை பெய்தது.
2005ம் ஆண்டு பியார், பாஸ், பனூஸ் என மூன்று புயல்கள் ஒன்றன் பின் ஒன்றாக தாக்கியது. இதன் காரணமாக 2005ம் ஆண்டு மொத்தமாக 773 மில்லிமீட்டர் மழை பெய்தது. சராசரியாக 432 மில்லி மீட்டர் என கணக்கிடப்பட்டது. இது 79 சதவீதம் இயல்பைவிட கூடுதல். அதனால் 2005ம் ஆண்டு பெரிய அளவிலான சேதம் ஏற்பட்டது. தமிழகமே வெள்ளக்காடானது. பல கோடி மதிப்பு பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின. நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன.

நிஷா புயல்

2008ம் ஆண்டு வந்த நிஷா புயல் வங்கக் கடலில் உருவானது. 22 ஆண்டுகளுக்கு பிறகு வங்கக் கடலில் உருவான பெரும் புயல் என்று வர்தாவைவானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

நவம்பர் மாதம் தோன்றிய இந்த புயல் சுமார் 20 நாட்கள் தமிழகத்தில் மழையை கொட்டித்தீர்த்து காரைக்காலில் கரையை கடந்தது. இதனால் 12 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. 177 பேர் இறந்தனர். 2782 கால்நடைகள் இறந்தன. 61 ஆயிரம் குடிசைகள் வெள்ளத்தில் மூழ்கின.


1.5 லட்சம் குடிசைகள் வீடுகள் சேதம் அடைந்தன. சுமார் 8.80 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். 14 லட்சம் பேருக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

தானே புயல்

2011ம் ஆண்டு தானே புயல் வங்கக் கடலில் உருவாகி தமிழகத்தை தாக்கியது. அந்த ஆண்டு டிசம்பர் 25ம் தேதி உருவான இந்த புயல்தான் முதலாவது அதிதீவிரப் புயல் என்ற பட்டியலில் இடம் பிடித்தது. இது டிசம்பர் 30ம் தேதிதான் புதுச்சேரிக்கும், கடலூருக்கும் இடையே கரையைக் கடந்தது.

மணிக்கு 110 கிலோமீட்டர்வேகத்தில் காற்று வீசியது. அப்போது சென்னையில் 2 பேர், புதுச்சேரியில் 7 பேர் , கடலூரில் 39 பேர் உயிரிழந்தனர். 1000க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிப்படைந்தன. 40 ஆயிரம் மின் கம்பங்கள் முறிந்து விழந்தன.


2015ம் ஆண்டு பருவமழையின் போது செபலா, மெஹ் என்று இரண்டு புயல்கள் அரபிக் கடல் பகுதியில் தோன்றினாலும் வங்கக் கடலில் பெரிய அளவில் புயல் ஏதும் உருவாகவில்லை.

வர்தா புயல்:

2016 ஆம் ஆண்டு டிசப்மர் 6 ஆம் தேதிமுதல் 19 தேதிவரை வர்தா புயல் நீடித்தது.மணிக்கு 155 கிலோமிட்டர் வேகத்தில் காற்று வீசியது.சென்னையில் இரு நாள் மட்டுமே காணப்பட்டாலும் அதன் தாக்கம் வீரியமாக இருந்தது. ஆயிரக்கணக்கான மரங்கள் சாய்ந்தன. வாகன நெரிசல் ஏற்பட்டது.


ஓகி புயல்

2017 ஆம் ஆண்டு நவம்பர்29 தேதி தொடங்கிய ஓகி புயல் டிசம்பர் 6 ஆம் தேதிவை நீடித்தது. ஓகி புயல் கன்னியாகுமாரியை புரட்டி போட்டது. மணிக்கு 185 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது. ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலில் தவித்தனர். மீட்புநடவடிக்கைகள் சரிவர நடைபெறவில்லை என்று மீனவர்களின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

அடுத்த செய்தி