ஆப்நகரம்

தனியார் மருத்துவமனையில் கல்லீரல் மாற்று நோயாளி சிறைவைப்பு

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட நோயாளியிடம் கூடுதல் கட்டணம் கேட்டு அவரை பிடித்து வைத்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

TNN 8 Nov 2016, 6:04 pm
சென்னை: சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட நோயாளியிடம் கூடுதல் கட்டணம் கேட்டு அவரை பிடித்து வைத்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Samayam Tamil liver transplant patient detained in chennai hospital
தனியார் மருத்துவமனையில் கல்லீரல் மாற்று நோயாளி சிறைவைப்பு


அந்தமானைச் சேர்ந்த அஜய் சிங் என்பவர் கல்லீரல் பாதிப்பு காரணமாக கடந்த ஜூன் 18ஆம் தேதி தனியார் மருத்துவமனை ஒன்றில் பரிசோதனைக்காக வந்துள்ளார். அப்போது உடனடியாக அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனைக் கூறியதையடுத்து, அஜயின் மனைவி மீனால் சிங் தனது ஒரு கல்லீரலை கணவருக்கு தானம் செய்துள்ளார்.

இந்த் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் ரூ.33 லட்சம் பணம் செலுத்தியதாகவும், அஜயின் நிலை மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். பின்னர் அஜய் உடல்நலம் தேறிவரும் நிலையில், முன்பு கட்டிய பணத்தை சேர்க்காமல் கூடுதலாக ரூ.39 லட்சம் செலுத்த வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் கூறியதாக மீனால் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

உடல்நலம் குணமடைந்தும் பணம் செலுத்தினால் தான் கணவரை விடுவிப்பதாக மருத்துவமனை கூறி வருவதாகவும், மருத்துவமனையில் இருக்கும் தனது கணவரை ஜன்னல் வழியாக மட்டுமே பார்க்க அனுமதிப்பதாகவும் மீனால் குற்றம்சாட்டியுள்ளார். இந்நிலையில், இது குறித்து கடந்த செப்.27ஆம் தேதி பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் மீனால் புகார் அளித்துள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பாக பள்ளிக்கரணை போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததையடுத்து மீனால், சென்னை உயர்நீதிமன்றத்தில் 'ஹேபியஸ் கார்பஸ்' மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, அஜய் குறித்து உரிய பதிலளிக்குமாறு பள்ளிக்கரணை போலீசுக்கும், மருத்துவமனை நிர்வாகத்துக்கும் உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அடுத்த செய்தி