ஆப்நகரம்

உள்ளாட்சித் தேர்தல் தேதியை வெளியிட நாள் குறிச்சாச்சு!

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையம்...

Samayam Tamil 18 Nov 2019, 1:52 pm
தமிழ்நாட்டில் கடந்த 3 வருடங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் அடிப்படையில், இந்த ஆண்டு இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
Samayam Tamil dc-Cover-96kcpc9v9cqf0k8t8r6f4dd4p1-20191102014233.Medi


நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு முன், உள்ளாட்சித் தேர்தலை நடத்தப் பலமுறை அவகாசம் அளித்து உத்தரவிட்டது. உத்தரவுகளை, அப்போதைய நேரத்தில் தமிழ்நாடு அரசும், தேர்தல் ஆணையமும் அவமதித்துவிட்டது எனக் கூறப்பட்டு, அதுகுறித்து வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

144 தடை, உயர்நிலைக்குழு அமைப்பு - சூடுபிடிக்கும் ஜே.என்.யூ விவகாரம்!

இந்த வழக்கின் விசாரணை இன்று வந்தபோது, நீதிபதிகள் இன்னும் ஒருவாரம் மட்டுமே தேர்தல் ஆணையத்துக்கு அனுமதி அளிக்க முடியும் எனக் கூறினர். ஒரு வாரத்தில் தாக்கல் செய்ய முடியுமா என்பது குறித்துத் தேர்தல் ஆணையத்திடம் நீதிபதிகள் பதில் கேட்டனர்.

கீழடி அருங்காட்சியகம் அமைக்க திட்டம் இல்லை: மத்திய அரசு!

அதற்கு, தேர்தல் ஆணையம் “டிச.2 ஆம் தேதி தேர்தல் தேதியை அறிவித்து விடுகிறோம். அதிலிருந்து ஒருவாரம் அவகாசம் கொடுத்தால், நாங்கள் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான முழு அறிக்கையையும் தாக்கல் செய்கிறோம்” எனக் கோரிக்கை வைத்தனர்.

இதை ஏற்ற நீதிபதிகள், டிச. 13ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து, அதற்குள் தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான முழு அறிக்கையையும் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

அடுத்த செய்தி