ஆப்நகரம்

உள்ளாட்சித் தேர்தல்: 27 மாவட்டங்களுக்கு குட் நியூஸ் சொன்ன தமிழ்நாடு அரசு!

உள்ளாட்சித் தேர்தலையடுத்து 27 மாவட்டங்களுக்கு 27, 30 தேதிகளில் பொது விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 24 Dec 2019, 6:38 pm
ஊரக உள்ளாட்சித் தேர்தல் காரணமாகத் தேர்தல் நடக்கும் 27 மாவட்டங்களில் 27, 30 தேதிகளில் பொது விடுமுறை அளித்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
Samayam Tamil images (24)


தமிழகத்தில் கடந்த மூன்றாண்டுகளாக நடத்தப்படாத உள்ளாட்சித் தேர்தலை டிசம்பர் மாதத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, நீண்ட சட்டப்போராட்டத்துக்கு பின்னர், நெல்லை தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை என 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது.

டாஸ்மாக் கடைகளுக்கு எத்தனை நாள் விடுமுறை தெரியுமா?

இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 9ஆம் தேதி தொடங்கி 16ஆம் தேதியுடன் முடிவடைந்தது. ஊராட்சித் தலைவர், ஊராட்சி உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் உள்ளிட்ட ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், சுயேச்சைகள் என ஏராளமானோர் ஆர்வமுடன் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட 27 மாவட்டங்களில் 2,98,335 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன் மீதான பரிசீலனைகள் முடிந்து இறுதி வேட்பாளர்கள் பட்டியலைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 2,31,890 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதுதவிர, 18,570 பதவிகளுக்கான வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி: போட்டியின்றி வெற்றிபெற்றவர்கள் எத்தனை பேர் தெரியுமா?

இதுபோன்று தேர்தல் நேரத்தில், தேர்தல் நடக்கும் நாளன்று அரசு விடுமுறை அளித்து வாக்காளர்கள் எளிதாக வாக்கு அளிக்க அரசு வழிவகை செய்யும். அதன்படி இப்போது ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் மாவட்டங்களில் அரசு பொது விடுமுறை அளித்து ஆணை ஒன்றைப் பிறபித்துள்ளது.

அதன்படி, தேர்தல் நாளன்று தேர்தல் நடக்கும் மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இப்போது வெளியிட்டுள்ள அரசு ஆணைபடி, தேர்தல் நடக்கும் 27 மாவட்டங்களில் உள்ள தனியார், அரசு நிறுவனங்களுக்கு விடுமுறை விட அரசு உத்தரவிட்டுள்ளது.

அடுத்த செய்தி