ஆப்நகரம்

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்: நலத்திட்ட உதவிகள் வழங்க தடை

தமிழ் நாட்டில் உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிப்பானதை அடுத்து நலத்திட்ட உதவிகளை வழங்கவும், அறிவிக்கவும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

Samayam Tamil 2 Dec 2019, 5:29 pm
தமிழகத்தில் 3 ஆண்டுகளாக நடக்காமல் இருந்த உள்ளாட்சி தேர்தலின் தேதி இன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி டிசம்பர் மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடக்கவுள்ளது.
Samayam Tamil தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்: நலத்திட்ட உதவிகள் வழங்க தடை


ஆனால் பேரூராட்சி, நகராட்சி நிர்வாக தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் நலத்திட்டங்களை குறித்த அறிவிப்புகளுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு!

அதாவது, புதிய திட்டங்கள் குறித்தும், நிதி ஒதுக்கீடு குறித்தும் அறிவிப்புகளை வெளியிடக்கூடாதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சட்ட மன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தக்கூடாதெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மேட்டுப்பாளையம் விபத்து: கேரள முதல்வர் பினராயி விஜயன் இரங்கல்

ஊரக உள்ளாட்சிகளில் நடைபெறும் இந்த நேர்முகத் தேர்தலில் மொத்தம் 1,18,974 பதவி இடங்கள் அடங்கியுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி