ஆப்நகரம்

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்கவுள்ள தேதிகள் என்னென்ன? வெளியான தகவல்!

உள்ளாட்சி தேர்தல் எப்போது நடைபெறும் என்ற தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இது முதலமைச்சர் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Samayam Tamil 13 Nov 2019, 12:05 pm
தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருக்கிறது. இதற்காக நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரிகளின் பதவிக்காலமும் நிறைவு பெற்றுவிட்டது. இதன் காரணமாக உள்ளாட்சிகளில் ஏராளமான பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
Samayam Tamil Election


இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் தொடர்ந்து கால அவகாசம் கேட்கப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு: புதிதாக உருவான மாவட்டங்கள், கோட்டங்கள், வட்டங்கள்!

இந்நிலையில் வரும் டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. இந்த தேர்தலில் பணியாற்ற 6.5 லட்சம் தேர்தல் பணியாளர்களின் பட்டியலை உள்ளாட்சி அமைப்புகளிடம் மாநில தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது.

அதேசமயம் பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை அதிகாரிகளிடமும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தி இருக்கின்றனர். அதன்படி பள்ளி, கல்லூரி தேர்வு அட்டவணைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிந்தது!

குறிப்பாக பள்ளிகளில் அரையாண்டு தேர்வை வரும் டிசம்பர் 23ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சூழலில் மாநில தேர்தல் ஆணையருடன் முதலமைச்சர் பழனிசாமி உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளார்.

அதில் தேர்தல் தேதி, உள்ளாட்சி அமைப்புகளின் பங்களிப்பு உள்ளிட்டவை குறித்து பேசப்பட்டுள்ளது. மேலும் டிசம்பர் 27, 28 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தென்சென்னை மக்களை குஷிப்படுத்தும் மெட்ரோ ரயிலின் அடுத்த திட்டம் - உங்க ஏரியாவிற்கும் வருது!

இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக காத்திருக்க வேண்டியுள்ளது.

அடுத்த செய்தி