ஆப்நகரம்

வரும் (03.08.2021) செவ்வாய்க்கிழமை உள்ளூர் விடுமுறை: அரசாணை வெளியீடு

ஈரோடு மாவட்டத்தில் ஒருநாள் உள்ளூர் விடுமுறையை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Samayam Tamil 31 Jul 2021, 9:00 pm
தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு ஈரோட்டில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil file pic


இதுதொடர்பாக வெளியான அரசாணையில்,

1. ஈரோடு மாவட்டம், சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினம் ஆகஸ்ட் 3 செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்படுவதால், ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்து ஆணையப்படுகிறது.

2. உள்ளூர் விடுமுறை நாளான ஆகஸ்ட் 3 செவ்வாய்க்கிழமை அன்று அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு ஈரோடு மாவட்டத்திலுள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்களில் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்பட வேண்டியது எனவும் ஆணையிடப்படுகிறது.


3. இந்த விடுமுறை செலாவணி முறிச்சட்டம் 1881இன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது.

4. இவ்விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஆகஸ்ட் 14ம் தேதி சனிக்கிழமை அன்று பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி