ஆப்நகரம்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு: என்னென்ன கட்டுப்பாடுகள்?

கொரோனா பரவல் காரணமாக தமிழ்நாட்டில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.

Samayam Tamil 16 Apr 2021, 10:16 am
தமிழ்நாட்டில் தினசரி பாதிப்பு புதுப்புது உச்சங்களை எட்டி வரும் நிலையில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இன்று இது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளது.
Samayam Tamil lockdown again in tamil nadu what restrictions are to be imposed
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு: என்னென்ன கட்டுப்பாடுகள்?


உச்சத்தை தொடும் தமிழ்நாடு

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கொரோனா பாதிப்பு இருந்தபோதே தினசரி பாதிப்பு 7000ஐ தொடவில்லை. அப்போது முழு பொது முடக்கம் அமலில் இருந்தது. தற்போது இரண்டாவது அலையில் பாதிப்பு 8000ஐ நெருங்கிவிட்டது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வருகின்றன. நேற்று மட்டும் ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 29 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனாலும் மக்கள் சகஜமாக நடமாடி வருகின்றனர்.

அவசர ஆலோசனை!

கொரோனாவைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு சில தினங்களுக்கு முன் அறிவித்தது. கொரோனா கட்டுக்குள் வரவில்லை என்றால் மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் இன்று தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் இன்று அவசர ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

வெளியிட உள்ள அறிவிப்புகள்!

மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்: அரியர் தேர்வு ரத்து இல்லை!

இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட உள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. மத்திய அரசு நாடு தழுவிய பொது முடக்கத்தையோ, பெரியளவில் கட்டுப்பாட்டு அறிவிப்புகளையோ வெளியிடாத நிலையில் அதிக பாதிப்புகளைச் சந்தித்துள்ள மாநிலங்கள் கட்டுப்பாட்டு அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அதை பின்பற்றி தமிழக அரசு அறிவிப்புகளை வெளியிட உள்ளது என்கின்றனர்.

14 நாள்கள் பொது முடக்கம்?

பாதிப்பு அதிகமாவதால் 14 நாட்கள் முழு பொதுமுடக்கம் செய்ய வேண்டும் என மருத்துவர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு சார்பாக சுகாதாரத்துறை செயலாளருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனு குறித்தும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. டெல்லியில் நேற்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி வார இறுதி நாள்களான சனி, ஞாயிறு அகிய கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவித்தார். தமிழகத்திலும் இப்படியான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.

மீண்டும் இ பாஸ்!

திரையரங்குகள் தற்போது 50 சதவீத பார்வையாளர்கள் உடன் இயங்குகிறது. டெல்லியில் 30 சதவீதமாக குறைக்கப்பட்ட நிலையில் தமிழகத்திலும் இது பின்பற்றப்படலாம். கடைகள், உணவகங்கள் திறந்திருக்கும் நேரம் குறைக்கப்படலாம். பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவதிலும் கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்படலாம் என்கின்றனர். இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. மாவட்டங்களுக்குள் இ பாஸ் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

தடுப்பு நடவடிக்கை!

பதவியேற்க நாள் குறிச்சாச்சு: ஸ்டாலினுக்கு வீடு தேடும் குடும்பத்தினர்?

இது ஒருபுறமிருக்க கொரோனா தடுப்பு நடவடிக்கைகளாக தடுப்பூசியை அதிகளவில் செலுத்துதல், காய்ச்சல் முகாமை அதிகப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. சென்னையில் இன்று முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை மாலை 3 மணி வரை பொது மக்கள் கூடுவது, மனித சங்கிலி, பொதுக்கூட்டங்கள் ஆகியவை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி