ஆப்நகரம்

பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி: உதவிய ஆட்டோ ஓட்டுநருக்கு அபராதம் விதித்த போலீசார்

பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணிக்கு உதவிய ஆட்டோ ஓட்டுநருக்கு போலீசார் அபராதம் விதித்த நிலையில், காவல் ஆணையர் அதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்

Samayam Tamil 12 Jul 2020, 4:25 pm
கொரோனா ஊரடங்கை மீறி அத்தியாவசிய தேவைகளின்றி வெளியே வருபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும், வாகனங்களை பறிமுதல் செய்யவும் காவல்துறைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


அதன்படி, ஊரடங்கை மீறியவர்களிடம் இருந்து இதுவரை தமிழகம் முழுவது மொத்தமாக ரூ.17.84 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 8,41,230 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 6,30,662 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 7,66,717 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேசமயம் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வருபவர்களிடம் காவல்துறையினர் கிடுக்கிப்பிடி காட்டுவதாகவும், அவர்களிடம் சில சமயங்களில் அத்துமீறி நடந்து கொள்கின்றனர் எனவும் புகார்கள் எழுந்து வருகின்றன.

அந்த வகையில், மதுரையை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்ற ஆட்டோ ஓட்டுநர் பிரசவ வலியால் துடித்த பெண் ஒருவரை இலவசமாக தனது ஆட்டோவில் அழைத்து சென்று அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். பின்னர் அங்கிருந்து அவர் திரும்பி வரும்போது, கோரிப்பாளையம் சிக்னலில் அவரை வழிமறித்து பிடித்த போலீசார், ஊரடங்கை மீறி வெளியே சுற்றியதாக அவருக்கு ரூ.500 அபராதம் விதித்துள்ளனர். அவர் எவ்வளவு சொல்லியும் காவலர்கள் விடாப்படியாக அபராதம் விதித்துள்ளதாக தெரிகிறது.

கொரோனா: சென்னையில் அடுத்த 5 மாதங்களுக்கு?

இதனால், மனமுடைந்த அவர் இதுகுறித்த வீடியோவை வாட்ஸ் அப்பில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, ஆட்டோ ஓட்டுநரை தொடர்பு கொண்ட மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, நடைபெற்ற சம்பவத்துக்காக வருத்தம் தெரிவித்ததுடன் அபராதத் தொகையை ரத்து செய்தும் உத்தரவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி