ஆப்நகரம்

தமிழகத்தில் ஊரடங்கு வரும் 30ஆம் தேதி நீட்டிப்பு - என்னென்ன தளர்வுகள் தெரியுமா?

மத்திய அரசு அறிவிப்பை தொடர்ந்து தமிழகத்திலும் வரும் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

Samayam Tamil 31 May 2020, 8:43 am
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பின் அடிப்படையிலும் தற்போதைய ஊரடங்கு வரும் ஜூன் 30 நள்ளிரவு 12 மணி வரை பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடனும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.
Samayam Tamil தமிழக அரசு


கீழ்காணும் செயல்பாடுகளுக்கு தொடர்ந்து தடை:

* வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் வழிபாடு, அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள்

* நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு சுற்றுலா தலங்களுக்கு வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை

* ஓட்டல்கள், ரிசார்ட்கள், பிற விருந்தோம்பல் சேவைகள்

* வணிக வளாகங்கள்

தமிழகத்தில் பேருந்து சேவை தொடங்கப்படும் தேதி - வெளியான முக்கிய தகவல்!

* பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள்

* மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட பணிகள் தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கு தடை நீடிக்கும்.

* தியேட்டர்கள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கைக் கூடங்கள், மதுக்கூடங்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, சுற்றுலா தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள்

* அனைத்து வகையான சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், சமய, கல்வி, விழாக்கள், கூட்டங்கள், ஊர்வலங்கள்

* மாநிலங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து
தமிழக அரசு உத்தரவு
சென்னை காவல்துறை எல்லைக்கு உட்பட்ட நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் அனுமதிக்கப்படும் சேவைகள்:

* தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்களில் 20 சதவீத ஊழியர்கள் அதிகபட்சமாக 40 நபர்களுடன் இயங்கலாம்.

* அனைத்து தனியார் நிறுவனங்களும் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம்.

* வணிக வளாகங்கள், ஷோரூம்கள், பெரிய கடைகள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம்.

* வரும் 8ஆம் தேதி முதல் உணவகங்களில் அமர்ந்து உணவருந்த அனுமதி

* டீ கடைகள், உணவு விடுதிகள், காய்கறி, மளிகை கடைகள் 8ஆம் தேதி முதல் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி

* வாடகை, டாக்ஸி வாகனங்களை ஓட்டுநர் தவிர்த்து மூன்று பயணிகளை மட்டுமே கொண்டு மண்டலத்திற்குள் TN e-pass இன்றி பயன்படுத்தலாம்.

தமிழகத்தில் இத்தனை நாட்களில் இல்லாத பாதிப்பு... கொரோனா பிடியில் சென்னை...

* ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்கலாம். சைக்கிள் ரிக்‌ஷாவிற்கு அனுமதி

* முடிதிருத்தும், அழகு நிலையங்கள் குளிர் சாதன வசதி பயன்படுத்தாமல் அரசு நெறிமுறைகள் உடன் இயங்கலாம்.

பெருநகர் சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதி தவிர தமிழ்நாட்டின் பிறகு பகுதிகளில் கீழ்க்கண்ட பணிகளுக்கு ஜூன் 1 முதல் அனுமதி:

* டாஸ்மாக் உள்ளிட்ட இதர கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கலாம்

* அத்தியாவசியமற்ற பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களையும், மின் வணிக நிறுவனங்கள் வழங்க அனுமதிக்கப்படுகின்றன.

அடுத்த செய்தி