ஆப்நகரம்

பொதுமக்களே உஷார்: துணை ராணுவத்தினர் தமிழ் நாட்டுக்கு வராங்களாம்!

ஊரடங்கு உத்தரவை பொதுமக்களில் சிலர் அலட்சியப்படுத்தி வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் நிலையில், அதனை கடுமையாக்க துணை ராணுவப்படையினர் தமிழகத்துக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

Samayam Tamil 29 Mar 2020, 4:41 pm
சென்னை: ஊரடங்கு உத்தரவை மேலும் கடுமையாக்க ஏப்ரல் ஒன்றாம் தேதி துணை ராணுவ படையினர் தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


கொரோனா சமூக பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகிறது. அதில், முக்கியமாக நாடு முழுவதும் முடக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள காலத்தில் மருத்துவமனைகள், மருந்தகங்கள், காய்கறி, பழக்கடைகள், மளிகை கடைகள், பெட்ரோல் நிலையங்கள், காவல்துறை, பத்திரிகைகள், தீயணைப்பு துறையினர், தூய்மை பணியாளர்கள், செக்யூரிட்டி சர்வீஸ்கள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கும் அதில் பணிபுரியும் நபர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா: வீடு வீடாக வேட்டை நாளை ஆரம்பம் - அரசு அதிரடி!!

ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த நாள் முதலே சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. அரசின் உத்தரவை மதித்து பெரும்பாலும் பொது மக்கள் வீட்டினுள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். எனினும், அரசு அனுமதித்துள்ள அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு பொதுமக்கள் வெளியில் வர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

அதேசமயம், அரசின் உத்தரவை மதிக்காமல் வேண்டுமென்றே வெளியில் சுற்றும் நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் 144 தடையை மீறியதாக இதுவரை 17,668 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 11,565 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

எனினும், பொதுமக்களில் சிலர் ஊரடங்கை பொருட்படுத்தாமல் வெளியில் சுற்றிக் கொண்டுள்ளனர். அரசு எவ்வளவோ அறிவுறுத்தியும் அதனை சட்டை செய்யாமல் அலட்சியமாக அவர்கள் இருப்பது வேதனை அளிக்கும் வகையில் உள்ளது.

போலீசுக்கே டஃப் கொடுத்த வாகன ஓட்டி..! கொரோனா பீதியில் ஓர் சுவாரசியம்...

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவை மேலும் கடுமையாக்க ஏப்ரல் ஒன்றாம் தேதி துணை ராணுவ படையினர் தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துணை ரானுவத்தினர் வந்தால் அத்தியாவசிய தேவைகளின்றி வெளியில் சுற்றுவோர் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது நினைவிருக்கலாம்.

எனவே, கொடிய கொரோனாவை எதிர்கொள்ள அரசின் உத்தரவை மதித்து அதனுடைய வழிகாட்டுதல்களின்படி பொதுமக்கள் ஊரடங்கை கடைபிடித்து சமூக பொறுப்புணர்வோடு இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

அடுத்த செய்தி