ஆப்நகரம்

கொங்கு மண்டலத்தை வேட்டையாடிய திமுக; அதிா்ச்சியில் அதிமுக

அதிமுகவின் கோட்டையாக கருதப்பட்ட கோவை, நாமக்கல், ஈரோடு ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்தில் திமுக வெற்றி பெற்றுள்ளதால் அதிமுகவினா் கலக்கமடைந்துள்ளனா்.

Samayam Tamil 24 May 2019, 12:54 am
அதிமுகவின் கோட்டையாக கருதப்பட்ட கோவை, நாமக்கல், ஈரோடு ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்தில் திமுக வெற்றி பெற்றுள்ளதால் அதிமுகவினா் கலக்கமடைந்துள்ளனா்.
Samayam Tamil WhatsApp Image 2019-05-23 at 8.01.57 PM.


பொதுவாக அதிமுகவின் பிரமாண்ட வெற்றிக்கு எப்பொழுதும் துணையாக இருப்பது கொங்கு மண்டலம் தான். கோவை, ஈரோடு, திருப்பூா், நீலகிரி, பொள்ளாச்சி, நாக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூா் ஆகிய 10 மக்களவைத் தொகுதிகளை உள்ளடக்கிய பகுதி கொங்கு மண்டலமாக அழைக்கப்படுகிறது.

1004ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலின் போது அனைத்து தொகுதிகளையும் வென்ற திமுக கூட்டணியால் 2009ல் 4 தொகுதிகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. 2014ல் கொங்கு மண்டலத்தில் ஒரு தொகுதியை கூட கைப்பற்ற முடியவில்லை. அதே போன்று சட்டமன்ற தோ்தலிலும் அதிமுகவின் பிரிமாண்ட வெற்றிக்கு கைக் கொடுத்து வந்தது கொங்கு மண்டலம் தான்.

மேலும் தமிழகத்தில் பாஜகவுக்கு செல்வாக்கு உள்ள பகுதிகளில் கோவையும் ஒன்று. இந்த மக்களவைத் தோ்தலில் அதிமுக, பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடுவதால் கொங்கு மண்டலத்தில் அதிமுகவுக்கு வெற்றி உறுதி என்ற அடிப்படையில் ஆளும் கட்சியினா் கருதினா். இருப்பினும் கோவையில் பிரதமா் நரேந்திர மோடியும் பிரசரம் மேற்கொண்டிருந்தாா்.

ஆனால், தற்போது நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் திமுக ஒட்டு மொத்தமாக கொங்கு மண்டலத்தை தனதாக்கியுள்ளது.

கொங்கு மண்டலத்தை குறிவைத்து வியூகம் அமைத்த திமுக அங்கு தனது பலத்தை அதிகரிக்க கொங்கு மக்கள் தேசிய கட்சியை தனது கூட்டணியில் இணைத்துக் கொண்டது.

கோவை, ஈரோடு ஆகிய பகுதிகள் தொழில் நகரங்கள் என்பதாலும், சிறு, குறு நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதி என்பதாலும் பணம் மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற திட்டங்கள் அங்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தன. இதனால் அப்பகுதி தொழிலாளா்கள் பாஜக மீது அதிருத்தியில் இருந்ததாக தொிகிறது.

இவை அனைத்தையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட திமுக அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு பலத்தின் அடிப்படையில் கொங்கு மண்டலத்தை பங்கிட்டு கொடுத்தது. அதன் விளைவாக கொங்கு மண்டலத்தின் அனைத்து தொகுதிகளையும் திமுக தற்போது வசமாக்கியுள்ளது. இதனால் ஆளும் அதிமுக அதிா்ச்சி அடைந்துள்ளது.

இதே போன்று பொள்ளாச்சி தொகுதியில் திமுக கடந்த 39 ஆண்டுகளுக்குப் பின்னா் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது.

அடுத்த செய்தி