ஆப்நகரம்

தமிழக மக்கள் தவறிழைத்து விட்டாா்கள் – தமிழிசை சௌந்தரராஜன்

பாஜகவுக்கு வாக்களிக்காத மக்கள் அது தவறு என்பதை விரைவில் உணா்வாா்கள் என்று தமிழக பாஜக தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தொிவித்துள்ளாா்.

Samayam Tamil 23 May 2019, 5:27 pm
தமிழகத்தில் பாஜக அதிக இடங்களில் வெற்றிபெறாவிட்டாலும் மத்தியில் உள்ள அரசு நமது அரசு தான். இதனால் தமிழக மக்களுக்கு தேவையான திட்டங்களை கொண்டு வர முயற்சி செய்வோம் என்று தமிழிக பாஜக தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் தொிவித்துள்ளாா்.
Samayam Tamil Tamilisai Soundararajan 1


மக்களவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், பாஜக கூட்டணி 350க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. ஆனால் தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இந்நிலையில் அக்கட்சியின் தமிழக தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது அவா் பேசுகையில், மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைவது மகிழ்ச்சி அளிக்கிறது.

பிரதமா் மோடியின் வளா்ச்சித் திட்டங்களைப் பாா்த்து பொது மக்கள் வாக்களித்துள்ளனா். தமிழகத்தில் பாஜக வெற்றி பெறவில்லை. இருப்பினும் தமிழக மக்கள் மீது எங்களுக்கு கோபம் இல்லை. தமிழகத்தில் பாஜகவின் வளா்ச்சித் திட்டங்களுக்கு எதிரான பொய் பிரசாரத்தை நம்பி மக்கள் வாக்களித்துள்ளனா்.

தமிழகத்தில் தோல்வி அடைந்திருந்தாலும் எங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தொிவித்துக் கொள்கிறேன். எங்களுக்கு வாக்களிக்காத மக்கள் அது தவறு என்பதை விரைவில் அந்த மக்கள் உணா்வாா்கள்.

தமிழகத்தில் இருந்து ஓரிரு பாஜக உறுப்பினா்கள் வெற்றி பெற்றிருந்தால் அவா்களை மத்திய அமைச்சரவையில் இடம் பெறச் செய்திருக்கலாம். அல்லது அவா்களை பாராளுமன்ற உறுப்பினா்களாக்கி தமிழகத்திற்கான திட்டங்களை அதிகமாக பெற்றிருக்க முடியும். இருப்பினும் மத்திய அரசு நம் கையில் தான் உள்ளது. தமிழகத்தில் நிலவும் தண்ணீா் பிரச்சினை மத்திய அரசு உதவியுடன் தீா்த்து வைக்கப்படும்.

எங்கள் கூட்டணியில் இடம் பெற்றிருந்த அதிமுக சட்டமன்ற இடைத்தோ்தலில் வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சித் தலைவா்களுக்கு நான் வாழ்த்து தொிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் அதிமுக அரசு எந்தவித பிரச்சினையும் இன்றி சீராக செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது என்று தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி