ஆப்நகரம்

நீதிமன்றத்துக்கு நன்றி, மிகவிரைவில் ஸ்டெர்லைட் திறக்கப்படும்: அனில் அகர்வால் சூட்சமம்

ஸ்டெர்லைட் ஆலை திறப்பதற்கு மிக ஆவலுடன் காத்திருப்பதாக வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 9 Jan 2019, 5:32 pm
ஸ்டெர்லைட் ஆலை திறப்பதற்கு மிக ஆவலுடன் காத்திருப்பதாக வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil anil agarwal sterlite


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், தமிழக அரசை பொறுத்த வரையில், ஸ்டெர்லைட் ஆலை ஒரு போதும் திறக்கபடாது என்பதில் உறுதியாக உள்ளது.

இந்நிலையில், ஸ்டெர்லைட்டின் வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால், ஆலை திறப்பு குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், ‘ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். உலக சுற்றுச்சூழல் தர கோட்பாடுகளுக்கு நாங்கள் கடமைபட்டுள்ளோம். எனவே, சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காதவாறு ஆலை திறப்பை மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் தூத்துக்குடி மக்களுக்கு நன்றி’ இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேவையான நடவடிக்கையை முறைப்படி சட்டரீதியாக மேற்கொள்வோம் என்று வேதாந்த குழுவினர் ஏற்கனவே தெரிவித்த நிலையில், அனில் அகர்வாலின் இந்த டுவிட்டர் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடக் கோரி பல்வேறு தரப்பினரும் தூத்துக்குடியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்பு கருதி ஆலையை சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டள்ளது.

அடுத்த செய்தி