ஆப்நகரம்

அனைத்து கட்சியினரும் வழிபடும் எம்ஜிஆர் கோவில்: திருவள்ளூரில் சுவாரஸ்யம்

தமிழகத்தில் தேர்தல் நெங்குவதால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள எம்ஜிஆர் கோவிலுக்கு அதிகமான வேட்பாளர்கள் வருவதாகவும், எல்லா கட்சியை சேர்ந்தவர்களும் இங்கே வந்து வழிபடுவதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

Samayam Tamil 30 Mar 2019, 2:35 pm
தமிழகத்தில் தேர்தல் நெங்குவதால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள எம்ஜிஆர் கோவிலுக்கு அதிகமான வேட்பாளர்கள் வருவதாகவும், எல்லா கட்சியை சேர்ந்தவர்களும் இங்கே வந்து வழிபடுவதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil 3acb1f8f-dbbd-4bb6-a1c8-495ea1cc604e


தமிழக அரசியல் வரலாற்றில் முக்கிய தலைவர்களில் ஒருவர் எம்ஜிஆர். அவர் மறைவிற்கு பிறகும் இன்னும் பல கோடி மக்கள் மனதில் வாழ்ந்து வருகிறார். இவரை பலர் அரசியல் தலைவர் என்று பார்ப்பதில்லை. கடவுளாகவே பார்க்கிறார்கள். மேலும் இவருக்கு திருவள்ளூர் மாட்டத்தில் உள்ள நாத்தமேடு பகுதியில் கோவில் கட்டப்பட்டுள்ளது. கலைவானன் என்பவர் 2011ம் ஆண்டில் இந்த கோவிலை கட்டியுள்ளார்.


இவர் எம்ஜிஆர்-யை தெய்வமாகவே பார்க்கிறார் என்று கூறுகிறார். இந்த கோவிலில் பக்தி பாடல்கள் ஒலிபரப்பப்படுவதில்லை. எம்ஜிஆர் படத்தில் உள்ள தன்னம்பிக்கையை ஊக்குவிக்கும் பாடல்கள் மட்டுமே ஒலிபரப்பப்படுகிறது.


மேலும் இந்த கோவிலுக்கு அதிமுகவை சேர்ந்தவர்கள் மட்டும் வருவதில்லை என்றும் மற்ற கட்சி வேட்பாளர்களும் இங்கு வந்து வழிப்படுவதாக கலைவானன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த கோவிலுக்கு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் மட்டும் வருவதில்லை. பல ஆண்டுகளாக குழந்தை இல்லாதவர்கள் என்று எல்லா தரப்பு மக்களும் இங்கே வந்து வழிபடுகிறார்கள்.


மேலும் சபரிமலைக்கு மாலை போட்டு விரதம் இருப்பதுபோல் இங்கேயும் 41 நாட்கள் விரதம் இருக்கிறது. எப்படி மற்ற கடவுகளுக்கு விரதம் இருக்கிறார்களோ அதே வழிமுறையை இங்கேயும் பின்பற்றப்படுகிறது.

இந்த கோவிலில் இரண்டு எம்ஜிஆர் சிலைகள் இருக்கிறது.மேலும் ராமபுரம் வீட்டில் அவர் பயன்படுத்திய நாற்காலியும் இந்த கோவிலில் இருக்கிறது. எம்ஜிஆர் மறைந்து பல ஆண்டுகள் கழித்து கலைவானன் மனைவி கனவில் வந்ததாகவும், அவர் கனவில் வரும்போது அவர் வருத்தமாக இருந்ததால் இந்த கோவில் கட்ட முடிவெடுத்ததாக கலைவானன் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி