ஆப்நகரம்

கந்த சஷ்டி கவசம் சர்ச்சை: வைரலாகும் ஜெயலலிதா பாடிய முருகன் பாடல் !!

மறைந்த முதவ்வர் ஜெயலலிதா முருகப்பெருமானை துதித்து பாடிய பக்தி பாடல் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Samayam Tamil 22 Jul 2020, 5:55 pm
கந்த சஷ்டி கவசம் தொடர்பான சர்ச்சை தற்போது உச்சத்தில் இருக்கும் வேளையில், முருகப்பெருமானை துதித்து மறைந்த முதல்வர் ஜெயலலிதா பாடிய பாடல் ஒன்று சமூகவலைதளங்களில் வைலராகி வருகிறது.
Samayam Tamil jayalalitha


மறைந்த முதல்வர் ஜெயலலிதா, தான் நடித்த திரைப்படங்களில் சில பாடல்களை பாடியுள்ளார். இதனை அவரது ரசிகர்கள் நன்கு அறிவர். ஆனால், அவர் பக்தி பாடல்களையும் பாடியுள்ளார் என்ற தகவல் ஜெயலலிதாவின் ரசிகர்கள், அபிமானிகள் பலருக்கும் தெரியாத ஒரு விஷயம்,

சினிமாவில் அவர் பிரபலமாக இருந்த காலத்தில், மறைந்த வயலின் வித்வானும், இசையமைப்பாளருமான குன்னக்குடி வைத்தியநாதன் இசையில். ''தங்க மயில் ஏறி வரும் எங்கள் வடிவேலவன்...'' எனும் முருகன் பாடலை ஜெயலலிதா பாடியுள்ளார்,



முருகனின் கந்த சஷ்டி கவசத்தை பழித்து, கருப்பர் கூட்டம் எனும் யூடியூப் சேனலில் அண்மையில் பதிவிடப்பட்ட வீடியோ, ஹிந்து சமூக மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்கு நடிகர் ரஜினிகாந்த் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், முருகப்பெருமானை துதித்து பல ஆண்டுகளுக்கு முன் ஜெயலலிதா பாடிய, ''தங்க மயில் ஏறி வரும் எங்கள் வேலவன்...'' என்ற பாடல் இப்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

“கந்த சஷ்டி கவசம்... ஈனச் செயல்” ரஜினி ட்வீட்!

நடிகர் அஜித் நடித்த பில்லா 2 திரைப்படத்தில், பாடலாசிரியர் பா. விஜய் எழுதிய சேவல் கொடி பறக்குதடா என்ற பாடலும் சமூக வலைதளங்களில் சமீபத்தில் வைரலாகியது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி