ஆப்நகரம்

வாட் வரி உயர்வு: லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் 30ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொள்வதாக, லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

TNN 18 Mar 2017, 11:20 pm
பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் 30ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொள்வதாக, லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
Samayam Tamil lorry association calls for indefinite strike from march 30
வாட் வரி உயர்வு: லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்


தமிழகத்தில், பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி சமீபத்தில் உயர்த்தி, அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, பெட்ரோல், டீசல் விலை திடீரென விலை அதிகரித்துள்ளன. வழக்கமாக, எண்ணெய் நிறுவனங்கள்தான் பெட்ரோல், டீசல் விலையை மாதத்திற்கு 2 முறை வீதம், உயர்த்தியும், குறைத்தும் அறிவித்து வருகின்றன.

ஆனால், தமிழக அரசின் திடீர் அறிவிப்பால், லாரி உரிமையாளர்கள், பொதுமக்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்குக் கண்டனம் தெரிவித்தும், வாட் வரி உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர்.

இதன்படி, வரும் 30ம் தேதி தொடங்கி போராட்டம் நடைபெறும் என, மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி தெரிவித்தார். மேலும், அவர் கூறுகையில், ‘’பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்ச் 30 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம். தமிழகத்தில் மட்டும் 4 லட்சம் லாரிகள் இயங்காது. தென் மாநிலங்களில் 9.5 லட்சம் லாரிகள் இயங்காது,’’ எனக் குறிப்பிட்டார்.

VAT hike for petrol, diesel in Tamilnadu: Lorry association calls for indefinite strike.

அடுத்த செய்தி