ஆப்நகரம்

கோயம்பேட்டில் லாரி மோதி விபத்து : தம்பதி பலி

சென்னை கோயம்பேட்டில் டீசல் டேங்கர் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் தம்பதி உயிரிழந்தனர்.

TNN 18 Oct 2016, 4:08 am
சென்னை: சென்னை கோயம்பேட்டில் டீசல் டேங்கர் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் தம்பதி உயிரிழந்தனர்.
Samayam Tamil lorry bike coliation near koyampedu
கோயம்பேட்டில் லாரி மோதி விபத்து : தம்பதி பலி


திங்கள்கிழமை அன்று, கோயம்பேடு அருகே இருசக்கர வாகனம் மீது டீசல் ஏற்றிவந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குருநாதன்-விஜயலட்சுமி என்ற தம்பதியினர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் பாக்கியராஜை போலீசார் கைது செய்தனர். இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

கடந்த இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு, சென்னை கீண்டியில் தண்ணீர் லாரி மோதி கல்லூரி மாணவிகள் உயிரிழந்த நிலையில், தற்போதைய விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி