ஆப்நகரம்

தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தம்!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தம் மேற்கொண்டுள்ளனர்.

TNN 30 Mar 2017, 8:17 am
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தம் மேற்கொண்டுள்ளனர்.
Samayam Tamil lorry strike started across tamilnadu
தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தம்!


புதன்கிழமை நள்ளிரவு தொடங்கிய இந்த போராட்டம், லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் மற்றும் தென்னிந்திய மோட்டார் போக்குவரத்துக் கூட்டமைப்பால் நடத்தப்படுகிறது. தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களிலும் இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.

வட இந்திய மாநிலங்களில், ஏப்ரல் 20ம் தேதி இத்தகைய வேலைநிறுத்தம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

காப்பீடு பிரிமியத் தொகை உயர்வு, போக்குவரத்து அலுவலகங்களில் கட்டண உயர்வு, பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி உயர்வை வாபஸ் பெறுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் முன்வைத்துள்ளது.

தமிழகம் மட்டுமின்றி, தென்னிந்திய மாநிலங்களில் சுமார் 18 லட்சம் லாரிகள் இயங்காது என்றும், இதனால் பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது.

மத்திய, மாநில அரசுகள் பேச்சுவார்த்தைக்கு அழைத்து, உரிய தீர்வை முன்வைக்கும் வரை, தங்களது காலவரையற்ற போராட்டம் தொடரும் என்று, லாரி உரிமையாளர்கள் திட்டவட்டமாகக் கூறியுள்ளனர்.

தமிழகத்தில், கடந்த மார்ச் 5ம் தேதி, டீசல் மீதான மதிப்பு கூட்டு வரி 25% ஆகவும், பெட்ரோல் மீதான மதிப்பு கூட்டு வரி 37% ஆகவும் உயர்த்தப்பட்டது. இதனால், லாரி உரிமையாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

Lorry owners started indefinite strike across Tamilnadu.

அடுத்த செய்தி