திருச்சி அருகே காதல் திருமணம் செய்த லாரி டிரைவரை கல்லால் அடித்துக் கொன்றதாக பெண்ணின் சகோதரர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி அருகே கல்லகத்தை சேர்ந்தவர் செல்வராஜின் மகன் இளையராஜா. லாரி டிரைவர். இளையராஜாவும் அதே கிராமத்தை சேர்ந்த 17 வயது ஆனந்தியும் குடும்பத்தின் எதிர்ப்பையும் மீறி சமீபத்தில் காதல் திருமணம் செய்து கொண்டனர்.
வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பிய ஆனந்தியின் அண்ணன் அருண் இருவருக்கும் முறையாக திருமணம் செய்து வைப்பதாகக் கூறி தனது சகோதரியை தன்னுடன் அழைத்து சென்றார்.
இந்நிலையில் கடந்த மே 30ஆம் தேதி இரவு இளையராஜா, நண்பர் பாலாஜி,அருண் ஆகியோர் கல்லகத்திலிருந்து, கல்லக்குடிக்கு சென்று மது அருந்தியதாகவும், அப்போது, அருணுனும், சிலரும் சேர்ந்து இளையராஜாவையும், பாலாஜியையும் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. தப்பிச் சென்ற பாலாஜி கல்லக்குடி போலீசில் தகவல்கொடுத்தார். போலீசார் வந்து பார்த்தபோது இளையராஜா இறந்து கிடந்தார்.
இதையடுத்து, இளையராஜாவின் குடும்பத்தினர் கொடுத்த வற்புறுத்தலின் காரணமாக தலைமறைவான ஆனந்தியின் அண்ணன் அருண் குமார் மற்றும் அவரது நண்பர்கள் நண்பர்கள் ராஜா, ஜீவா, வினோத் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இவர்களில் அருண்குமார், அவரது நண்பர் வினோத்தை போலீசார் நேற்று மாலை கைது செய்தனர். மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி அருகே கல்லகத்தை சேர்ந்தவர் செல்வராஜின் மகன் இளையராஜா. லாரி டிரைவர். இளையராஜாவும் அதே கிராமத்தை சேர்ந்த 17 வயது ஆனந்தியும் குடும்பத்தின் எதிர்ப்பையும் மீறி சமீபத்தில் காதல் திருமணம் செய்து கொண்டனர்.
வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பிய ஆனந்தியின் அண்ணன் அருண் இருவருக்கும் முறையாக திருமணம் செய்து வைப்பதாகக் கூறி தனது சகோதரியை தன்னுடன் அழைத்து சென்றார்.
இந்நிலையில் கடந்த மே 30ஆம் தேதி இரவு இளையராஜா, நண்பர் பாலாஜி,அருண் ஆகியோர் கல்லகத்திலிருந்து, கல்லக்குடிக்கு சென்று மது அருந்தியதாகவும், அப்போது, அருணுனும், சிலரும் சேர்ந்து இளையராஜாவையும், பாலாஜியையும் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. தப்பிச் சென்ற பாலாஜி கல்லக்குடி போலீசில் தகவல்கொடுத்தார். போலீசார் வந்து பார்த்தபோது இளையராஜா இறந்து கிடந்தார்.
இதையடுத்து, இளையராஜாவின் குடும்பத்தினர் கொடுத்த வற்புறுத்தலின் காரணமாக தலைமறைவான ஆனந்தியின் அண்ணன் அருண் குமார் மற்றும் அவரது நண்பர்கள் நண்பர்கள் ராஜா, ஜீவா, வினோத் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இவர்களில் அருண்குமார், அவரது நண்பர் வினோத்தை போலீசார் நேற்று மாலை கைது செய்தனர். மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.