ஆப்நகரம்

பேஸ்புக் காதலுக்கு எதிர்ப்பு: தாயை கொலை செய்த மகளின் காதலன் கைது!

திருவள்ளூர் அருகே, பேஸ்புக் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயை மகளே கொலை செய்த வழக்கில், ஆந்திராவில் தலைமறைவாகப் பதுங்கி இருந்த காதலனை போலீஸார் நேற்று நள்ளிரவு கைது செய்து, திருவள்ளூர் கொண்டு வந்தனர். கைதான காதலனை திருவள்ளூர் டிஎஸ்பி கங்காதரன் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இன்று காலை 11 மணியளவில் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 26 Dec 2018, 10:32 am

ஹைலைட்ஸ்:

  • பேஸ்புக் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பெற்ற தாயை வெட்டிக்கொலை செய்த மகள்
  • மகள் மற்றும் காதலன் நண்பர்கள் இரண்டு பேர் கைது செய்து புழல் சிறையில் அடைப்பு
  • ஆந்திராவில் தலைமறைவாக இருந்த காதலனை கைது செய்த திருவள்ளூர் போலீஸ்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil பேஸ்புக் காதலுக்கு எதிர்ப்பு: தாயை கொலை செய்த மகளின் காதலன் கைது!
பேஸ்புக் காதலுக்கு எதிர்ப்பு: தாயை கொலை செய்த மகளின் காதலன் கைது!
திருவள்ளூர் அருகே, பேஸ்புக் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயை மகளே கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த காதலனை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூரை அடுத்த காக்களூர் ஆஞ்சநேயபுரம் எட்டாவது தெருவைச் சேர்ந்தவர் திருமுருகநாதன். இவரது மனைவி பானுமதி(50). இவர்களுக்கு சாமுண்டீஸ்வரி மற்றும் தேவி பிரியா என்ற 2 மகள்கள் உள்ளனர். இதில், இளைய மகள் தேவி பிரியா(19), பட்டாபிராம் பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில், தேவிபிரியா கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்(24) என்ற இளைஞருடன் முகநூலில் அறிமுகமாகி காதல் வயப்பட்டுள்ளார். மைசூரில் வேலை செய்து வரும் சுரேஷூம், தேவி பிரியாவும் ஒருவரையொருவர் நேரில் பார்க்கமால் கடந்த இரண்டு ஆண்டுகளாக முகநூலில் காதலித்து வந்துள்ளனர். இதையறிந்த தேவிப்பிரியாவின் பெற்றோர், மகளின் காதலுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் தேவி பிரியா தனது காதலன் நண்பர்கள் அஜீத்குமார்(19) மற்றும் விக்னேஷ்(17) துணையுடன் வீட்டை வெளியேற முயன்றார். இதைப்பார்த்த தாய் பானுமதி மகளை வீட்டில் இருந்து செல்லவிடாமல் தடுத்துள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த தேவிப்பிரியா, காதலன் நண்பர்களுடன் சேர்ந்து பெற்ற தாய் என்றும் பாராமல், பானுமதியை சரமாரியாக கத்தியால் தாக்கி கொலை செய்ய முயன்றார். இதில் படுகாயமடைந்த பானுமதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்த திருவள்ளூர் தாலுக்கா போலீஸார், தேவிபிரியா, அஜீத்குமார், விக்னேஷ் ஆகிய 3 பேரையும் கைதுசெய்து விசாரணை நடத்தியபின், திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இதில், விக்னேஷுக்கு 17 வயது என்பதால் செங்கல்பட்டில் உள்ள சிறுவர் சீர்திருத்தக் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

இந்நிலையில், ஆந்திராவில் தலைமறைவாகப் பதுங்கி இருந்த தேவிப்பிரியாவின் காதலன் சுரேஷை போலீஸார் நேற்று நள்ளிரவு கைது செய்து, திருவள்ளூர் கொண்டு வந்தனர். சுரேஷை திருவள்ளூர் டிஎஸ்பி கங்காதரன் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இன்று காலை 11 மணியளவில் திருவள்ளூர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி