ஆப்நகரம்

காட்டுக்குள் காதல் ஜோடி... சத்தமின்றி வந்த ட்ரோன் கேமரா... எகுறு எகுரேய்..!

ஊரடங்கை மீறி வெளியே வந்து காட்டுக்குள் அமர்ந்து சாவகாசமாக பேசிக்கொண்டிருந்த காதலர்களை ட்ரோன் கேமரா மூலம் போலீசார் விரட்டிய சம்பவம் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 25 Apr 2020, 7:44 pm
ஊரடங்கை மீறி வெளியே சுற்றும் பொறுப்பற்ற ஆசாமிகளுக்கு ட்ரோன் கேமராக்கள் தக்க பாடத்தை கற்று தருகிறது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கை மீறி கிரிக்கெட், குளியல் என வெளியே திரியும் நபர்களை காடு, கம்மாய் என வாகனங்கள் செல்ல முடியாத இடத்துக்கும் ட்ரோன் கேமராக்களை அனுப்பி போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
Samayam Tamil காட்டுக்குள் காதல் ஜோடி


அதன்படி, திருவள்ளுர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஏரிக்கரையில் கிரிக்கெட் விளையாடிய வாலிபர்கள் மற்றும் சிறுவர்களை போலீசார் ட்ரோன் கேமராவை பறக்கவிட்டு அவர்களை துரத்தினர். அடுத்தபடியாக அப்பகுதியில் இருந்த தைல மரக்காட்டில் காதல் ஜோடியொன்று ஏதோ மெரினா கடற்கரையில் சுண்டல் சாப்பிட்டு உட்காந்துகொண்டிருப்பதை போல காதல் கடலில் மூழ்கிக்கொண்டிருந்தது.


பின்னர், அங்கு வந்த ட்ரோன் கேமராவை கண்டதும் அந்த ஜோடி அறையடித்து டூ வீலரில் தப்பிச் சென்றது. அந்த வீடியோ சமூக ஊடக தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

அடுத்த செய்தி