ஆப்நகரம்

தேக்குமர தோப்பில் காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை!

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே உள்ள தேக்குமர தோப்பில் காதலனும், காதலியும் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இருவரின் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இருவரும் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Samayam Tamil 9 Dec 2018, 4:35 pm
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே உள்ள தேக்குமர தோப்பில் காதலனும், காதலியும் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டசம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil love


தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்த வைத்தியநாதன் பேட்டை தெற்கு தெருவை சேர்ந்த உதயகுமார் மகள் ஆர்த்தி. அதே தெருவை சேர்ந்த தண்டபாணி மகன் உத்தமன். இவர்கள் இருவரும் கடந்த இரண்டு வருடமாக காதலித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை வைத்தியநாதன் பேட்டை கொள்ளிடக் கரையில் உள்ள தேக்குமர தோப்பில் ஆர்த்தியும் உத்தமனும்தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டனர். இருவரின் உடலும் மரத்தில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், உடனடியாக இரு வீட்டாரின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து இருவரின் உடலையும் மீட்டு அவரவர் வீட்டிற்கு எடுத்து சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த வைத்தியநாதன் பேட்டை கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமார் நேற்று மாலை மருவூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இரண்டு பேரின் உடலையும் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இருவரும் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி