சென்னையில், காதல் ஜோடி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மடிப்பாக்கம் செந்தூர் காலனி தெருவைச் சேர்ந்த ரயில்வே அதிகாரி முருகன் (49). இவரது மனைவி லட்சுமி (45) தலைமை செயலகத்தில் அதிகாரியாக உள்ளார். இவர்களது மகள் சங்கீர்த்தனா (17). இவர் தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில், சங்கீர்த்தனா அப்பகுதியைச் சேர்ந்த ரவி (24) என்ற ஆட்டோ டிரைவரை காதலித்து வந்துள்ளார். சங்கீர்த்தனாவின் காதல் விவகாரம் எப்படியோ அவரது பெற்றோருக்கு தெரியவர, கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், வழக்கம் போல் கல்லூரிக்கு சென்றுவிட்டு பின்னர் வீடு திரும்பிய சங்கீர்த்தனா தனது காதலன் ரவி என்பவருடன் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை மடிப்பாக்கம் செந்தூர் காலனி தெருவைச் சேர்ந்த ரயில்வே அதிகாரி முருகன் (49). இவரது மனைவி லட்சுமி (45) தலைமை செயலகத்தில் அதிகாரியாக உள்ளார். இவர்களது மகள் சங்கீர்த்தனா (17). இவர் தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில், சங்கீர்த்தனா அப்பகுதியைச் சேர்ந்த ரவி (24) என்ற ஆட்டோ டிரைவரை காதலித்து வந்துள்ளார். சங்கீர்த்தனாவின் காதல் விவகாரம் எப்படியோ அவரது பெற்றோருக்கு தெரியவர, கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், வழக்கம் போல் கல்லூரிக்கு சென்றுவிட்டு பின்னர் வீடு திரும்பிய சங்கீர்த்தனா தனது காதலன் ரவி என்பவருடன் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.