ஆப்நகரம்

காற்றழுத்த தாழ்வு பகுதி...நான்கு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

வங்க கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் நான்கு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Samayam Tamil 10 Oct 2020, 5:55 pm
வங்கக் கடல் பகுதியில் நிலைக்கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மத்திய கிழக்கு வங்க கடல் மற்றும அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது.
Samayam Tamil heavy rain


இதன் காரணமாகவும், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும் அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் அனேக இடங்களில் இடியுடன்கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம். திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்.

16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை ஆய்வு மையம்!

அதேசமயம் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன்கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன்கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நகரின் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.

அரசு உயரதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை...ஆனா இந்த முறை சப்ஜெக்ட் வேற!

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக, கடலூர் மாவட்டம் வேப்பூரில் 13 சென்டிமீட்டர் மழையும், தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல், மதுரை மாவட்டம் மதுரை சவுத் ஆகிய இடங்களில் தலா 8 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

புதிய காற்றழுத்தம்: அந்தமான் கடல் பகுதியில் வரும் 14 ஆம் தேதி புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி