ஆப்நகரம்

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்தத் தாழ்வு நிலை தீவிரமடைய வாய்ப்பு!

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு நிலை தீவிரமடைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 8 Dec 2018, 2:59 pm
தமிழகம் மற்றும் புதுவையில் ஓரு சில இடங்களில் லேசானமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
Samayam Tamil தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்தத் தாழ்வு நிலை தீவிரமடைய வாய்ப்பு!
தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்தத் தாழ்வு நிலை தீவிரமடைய வாய்ப்பு!


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இந்தாண்டு வழக்கத்தைவிட குறைவான அளவே பெய்துள்ளது. இதனால் பெரும்பாலான நீர் நிலைகள், முக்கிய ஏரிகளில் நீர் இருப்பு மிகக்குறைந்து காணப்படுகிறது. இதனிடையே அவ்வபோது உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தின் ஒருசில இடங்களில் பரவலாக மழை பெய்தது. இருப்பினும் கடந்த 3 நாட்களாக வறண்ட வானிலையே நிலவி வருகிறது.

இந்நிலையில், தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு நிலை தீவிரமடைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியானது அடுத்த 48 மணி நேரத்தில் மாறி தொடர்ந்து தீவிரமடைய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அடுத்த சிலதினங்களுக்கு தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே, லட்சத்தீவுகள் மற்றும் மாலத்தீவுகள் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், கிழக்கு திசைக்காற்றின் காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி