ஆப்நகரம்

எல்.பி.ஜி லாரி உரிமையாளர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தம்!

மாநில அளவிலான டெண்டர் முறையைக் கைவிடக்கோரி, தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் இன்று இரண்டாவது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Samayam Tamil 13 Feb 2018, 8:27 am
மாநில அளவிலான டெண்டர் முறையைக் கைவிடக்கோரி, தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் இன்று இரண்டாவது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Samayam Tamil lpg tanker lorry owner strike
எல்.பி.ஜி லாரி உரிமையாளர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தம்!


எண்ணெய் நிறுவங்களுக்கும் டேங்கர் லாரி உரிமையாளர்களுக்குமான ஒப்பந்த காலம் முடிவடைந்ததையடுத்து, புதிய டெண்டருக்கான அறிவிப்பு கடந்த 23ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில் இனிவரும் காலங்களில் டெண்டர் மாநில அளவில் மட்டுமே நடத்தப்படும் என்றும், அந்தந்த மாநில பதிவெண் கொண்ட லாரிகள் மட்டுமே பங்கேற்க முடியும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. அதில் புதிய டெண்டர் அறிவிப்பை திரும்ப பெறக்கோரி, 12ஆம் தேதி காலை 6 மணி முதல் தென் மாநிலம் முழுவதும் உள்ள எல்.பி.ஜி டேங்கர் லாரிகள் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி, எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் நேற்று திட்டமிட்டபடி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று இரண்டாவது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, தெலுங்கானா ஆகிய தென்மாநிலங்களில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

அடுத்த செய்தி