ஆப்நகரம்

எல்.பி.ஜி லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்!

சமையல் எரிவாயு டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.

Samayam Tamil 17 Feb 2018, 12:21 pm
சமையல் எரிவாயு டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.
Samayam Tamil lpg tanker lorry owners strike withdrawn
எல்.பி.ஜி லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்!


எண்ணெய் நிறுவனங்களுக்கும் டேங்கர் லாரி உரிமையாளர்களுக்குமான ஒப்பந்த காலம் முடிவடைந்ததையடுத்து, புதிய டெண்டருக்கான அறிவிப்பு கடந்த 23ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில் இனிவரும் காலங்களில் டெண்டர், மாநில அளவில் மட்டுமே நடத்தப்படும் என்றும், அந்தந்த மாநில பதிவெண் கொண்ட லாரிகள் மட்டுமே பங்கேற்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. அதில் புதிய டெண்டர் அறிவிப்பை திரும்ப பெறக்கோரி, தென் மாநிலம் முழுவதும் உள்ள எல்.பி.ஜி டேங்கர் லாரிகள் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி, எல்.பி.ஜி. லாரி உரிமையாளர்கள் கடந்த 12ஆம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் பல லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 14 ஆம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் போரட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று கூறப்பட்டது. ஆனால் நேற்று எண்ணை நிறுவனங்கள் அவர்களின் சில கோரிக்கைகளை மட்டும் ஏற்றுக்கொண்டதால், தற்போது டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.

அடுத்த செய்தி