ஆப்நகரம்

ஷோரூமில் புகுந்து கார்களை திருடிய கும்பல்..!

கார் ஷோரூம் ஒன்றில் இன்று அதிகாலை புகுந்த மர்ம கும்பல் அங்கிருந்த 7 சொகுசு கார்களை திருடிச் சென்றுள்ளது.

TNN 8 Jun 2016, 10:37 am
சென்னையின் புறநகர் பகுதியான மணப்பாக்கத்தில் ஹோண்டா நிறுவனத்தின் கார்களுக்கான ஷோரூம் உள்ளது. இங்கு வாடிக்கையாளர்கள் பார்வையிடுவதற்காக பல்வேறு வகை சொகுசு கார்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
Samayam Tamil luxury cars looted from chennai honda showroom
ஷோரூமில் புகுந்து கார்களை திருடிய கும்பல்..!


இந்நிலையில் இன்று அதிகாலை ஷோரூமின் காவலாளியான மனோகரனை கடுமையாக தாக்கிவிட்டு ,மூடப்பட்டிருந்த ஷோரூமிற்குள் புகுந்த 20 பேர் கொண்ட மர்ம கும்பல், அங்கிருந்த 7 சொகுசு கார்களை திருடிச் சென்றது.

சுதாரித்துக் கொண்ட மனோகரன் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தார்.இதனையடுத்து தேடுதல் வேட்டையில் இறங்கிய காவல் துறையினர், அனைத்து காவல் நிலையத்தையும் உஷார்படுத்தினர்.

தங்களை காவல்துறையினர் தீவிரமாக தேடுவதை அறிந்த அந்த கும்பல், வளசரவாக்கம் பகுதியில் ஏழு கார்களையும் விட்டுவிட்டு தப்பிச்சென்றுவிட்டது.ஷோரூம் ஊழியர்கள் மூலம் கார்களை அடையாளம் கண்ட காவல்துறையினர் திருட்டில் ஈடுபட்ட கும்பலை தேடி வருகின்றனர்.

அடுத்த செய்தி