ஆப்நகரம்

கமலை காதலராக பார்த்தோம்… இனி தலைவராக பார்ப்போம்… கவிஞர் சினேகன்

இத்தனை நாட்கள் கமலை ஒரு காதலராக மட்டும் பார்த்தோம். ஆனால் இன்று முதல் அவரை தலைவராக பார்க்கப் போகின்றோம் என்று உணர்வு மிக மகிழ்ச்சியாக இருக்கின்றது என கவிஞர் சினேகன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 21 Feb 2018, 4:01 pm
ராமேஸ்வரம் : இத்தனை நாட்கள் கமலை ஒரு காதலராக மட்டும் பார்த்தோம். ஆனால் இன்று முதல் அவரை தலைவராக பார்க்கப் போகின்றோம் என்று உணர்வு மிக மகிழ்ச்சியாக இருக்கின்றது என கவிஞர் சினேகன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil lyrics writer snehan comment on kamal political entry
கமலை காதலராக பார்த்தோம்… இனி தலைவராக பார்ப்போம்… கவிஞர் சினேகன்


கலாம் இல்லத்தில் :
தன் அரசியல் பயணத்தை இன்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் இல்லத்திலிருந்து கமல் தொடங்கினார். பின்னர் அவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

சினேகன் கருத்து:
கமல் அரசியலில் பிரவிசித்துள்ள இந்த நாள் வாழ்நாளில் மறக்க முடியாதது. தமிழகத்தில் மாற்றம் வராதா என எதிர்பார்த்த மக்களுக்கு ஒரு மாற்றத்தை கொடுக்க கமல் வந்துள்ளதாக பாரிக்கின்றனர்.

தலைவர் :
இத்தனை நாட்கள் அவர் சினிமாவில் காதலராக பார்த்தோம். தற்போது அவரை தலைவராக பார்க்கின்றனர். ரசிகர்கள் மட்டுமல்லாமல், பொதுமக்களும் அவருக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். வேடிக்கை பார்ப்பது வேறு. வியந்து பார்ப்பது வேறு. அப்படி தான் மக்கள் கமலைப் பார்க்கின்றனர் என சினேகன் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி