ஆப்நகரம்

எம்ஜிஆர் ஆட்சிதான் தமிழகத்தில் நடக்கிறது : ரஜினிக்கு முதல்வர் பதிலடி!!

தமிழகத்தில் எம்ஜிஆர் ஆட்சித்தான் நடக்கிறது என்றும் எந்த வெற்றிடமும் இல்லை என்று நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளித்துள்ளார்.

Samayam Tamil 9 Mar 2018, 10:21 am
தமிழகத்தில் எம்ஜிஆர் ஆட்சித்தான் நடக்கிறது என்றும் எந்த வெற்றிடமும் இல்லை என்று நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளித்துள்ளார்.
Samayam Tamil m g ramachandran rule is going in tamilnadu edappadi k palaniswami replies to rajinikanth statement
எம்ஜிஆர் ஆட்சிதான் தமிழகத்தில் நடக்கிறது : ரஜினிக்கு முதல்வர் பதிலடி!!


நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் எம்ஜிஆர் கல்வி நிலையத்தின் விழாவில் கலந்து கொண்டு பேசுகையில், ''நான் ஆட்சிக்கு வந்தால் எம்ஜிஆர் ஆட்சி நடக்கும். தற்போது தமிழகத்தில் வெற்றிடம் உள்ளது'' என்றார்.

இந்நிலையில் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்த மகளிர் தின விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசுகையில், ''தமிழகத்திற்கு கிடைத்த பொக்கிஷம் பெரியார் . அவரது சிலையை சேதப்படுத்துவது கண்டனத்திற்கு உரியது . மேலும் அனைத்து தலைவர்களின் சிலைக்கும் பாதுகாப்பு கொடுக்க காவல்துறைக்கும் உத்தரவிட்டுள்ளேன்.

தமிழகத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சித்தான் நடக்கிறது. இந்தியாவிலே முதன்மையான இயக்கமாக அதிமுகவை மாற்றியது ஜெயலலிதா. மேலும் இங்கே வெற்றிடம் இல்லை . எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா எப்படி ஆட்சி செய்தார்களோ, அந்த வழியில்தான் ஆட்சி நடக்கிறது'' என்றார்.

அடுத்த செய்தி